கோவை ஜூலை 28- எல்ஐசியை தனியாருக்கு விற்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் கோவை மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்கம் கோவை மண்டல 65 ஆவது ஆண்டு மாநாடு மற்றும் 38 ஆவது பொதுக்குழு கூட்டம், மசக் காளிபாளையம் சாலையிலுள்ள ஹர்ஷா மஹாலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு, சங்கத் தின் கோட்டத் தலைவர் பி.வி.குமார் தலைமை வகித்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலை வர் வி.ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இணைச்செய லாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத்தலைவர் கள் சி.முத்துக்குமாரசாமி, ஆர்.தர் மலிங்கம், துணைச்செயலாளர் வி. சுரேஷ், தென்மண்டல முன்னாள் பொதுச்செயலாளர் வி.சாமிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இம்மாநாட்டில் எல்ஐசி பாலிசி பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனமான எல்ஐசியை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், கோவை கோட்டச் செயலாளர் கே. துளசிதரன் நன்றி கூறினார். முடி வில், சங்கத்தின் கோவை கோட்டத் தலைவராக பி.வி.குமார், செயலா ளராக கே.துளசிதரன், பொருளாள ராக பி.சாமிநாதன் உள்ளிட்ட நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்க கோவை கோட்டத் துக்குட்பட்ட நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இதனிடையே, பணி நிறைவு பெற்ற இன்சூரன்ஸ் கார்ப்பரே சன் ஊழியர் சங்க கோவை மாவட்ட முன்னாள் தலைவர் எம்.கஜேந்திர னின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தென்மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் க.சுவாமிநா தன், உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு நிர்வாகி உமா மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட் டது.