districts

img

காயத்துடன் சுற்றி வந்த காட்டுமாடு உயிரிழப்பு

கோவை, ஜூன் 8– வயிற்றில் காயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த காட்டுமாடு, சிகிச்சை பலனின்றி புதனன்று உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோவை வனச்சரக எல்லைக்குட்பட்ட பெரிய தடாகம் பகுதியில் செவ் வாயன்று காயமுற்ற நிலையில் ஆண் காட்டு மாட்டு சுற்றி வந்தது. உடல் மெலிந்து வயிற்று பகுதியில் காயத்துடன் இருந்த மாட்டிற்கு வனகால்நடை மருத்துவர் சுகுமார் முதுலு தவி அளித்தார். மேலும், வன பணியாளர்கள் தொடர்ந்து கண் காணித்து வந்தனர். இந்நிலையில், புதனன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. இதனையடுத்து கோவை  வனகோட்டம் உதவி வனப்பாதுகாவலர், கோவை வனச்சரக அலுவலர், சூழல் தணிக்கை நிலைய வனச்சரக அலுவலர் முன்னிலையில் இறந்த காட்டு மாட்டிற்கு பிரேத பரிசோ தனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது, என்றனர்.