உதகை, ஜன.20- அவலாஞ்சியில் வெள்ளியன்று மைனஸ் 4 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவானது. மேலும் 26 ஆவது நாளாக உறைபனி நீடித்து வருகி றது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவு கிறது. இக்காலங்களில் வெப்பநிலை அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தைத் தொட்டு, சில நாள்களில் மைனஸுக்கும் கீழ் இறங்கும். உறைபனியின் தாக்கத் தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறிப் பயிர்கள் போன்றவை கரு கியது. இந்நிலையில், கடந்த சில மாதங்க ளாக காலநிலை மாறுபாட்டால் இந் தாண்டு நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை தாமத மாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து பனிக்காலமும் 20 நாட்கள் தாமதமாக கடந்த நவம்பர் 15 ஆம் தேதியன்று தொடங்கியது. இதையடுத்து உதகை யில் மீண்டும் மழை ஆரம்பித்ததால் பனிப்பொழிவு குறைந்து ஒரு மாதத் திற்கு பின்னர் மீண்டும் கடந்த டிசம் பர் மாதம் 24ஆம் தேதி பனிப்பொழிவு தொடங்கியது.
தென் மாவட்டங்கள், டெல்டா மற் றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் 23 ஆம் தேதியன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் சனியன்று வறண்ட வானிலையே நில வும் எனவும், நீலகிரி, கோவை மாவட் டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்புள் ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி, உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இது 26 ஆவது நாளாக தொடர்கிறது. காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும், மாலை முதல் மறுநாள் விடியற்காலை வரை கடும் பனிப்பொழிவு நிலவி வருகி றது. உதகையில் வெள்ளியன்று குறைந் தபட்சமாக 1.6 டிகிரி செல்சியஸ், அதிக பட்சமாக 23 டிகிரி செல்சியஸ், அவ லாஞ்சி பகுதிகளில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவா னது. இது இந்த சீசனில் மாவட்டத்தில் முதல் முறையாக குறைந்தபட்சமாக பதிவானது. உறைபனியால் உதகை காஷ்மீரை போல் மாறி உள்ளது. தொடர் பனிப்பொழிவால் தேயிலை தோட்டங்கள் 40 சதவிகித்திற்கு மேல் சேதமடைந்துள்ளன. மேலும் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தேயிலை தோட்டங்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவி ரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள மைதானங்களில் உள்ள புல்வெளிகள் தொடர் உரை பனிப்பொழிவு காரண மாக தற்போது கருகி வருகின்றன. இதேபோல் வேலிவியு, குன்னூர், கோத்தகிரி, பர்லியார், உள்ளிட்ட பகுதி களிலும் உறைபனியின் தாக்கம் காணப் பட்டது.