districts

img

பிழைக்கத்தெரியாதவர்களால் பிழைத்திருக்கிறது நாடு

கோவை, ஜூலை 8- கம்யூனிஸ்ட்டுகளை பிழைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள். ஆம் எங் களைப்போன்ற பிழைக்கத்தெரியாத வர்களால்தான் இந்த நாடு இன்னமும் பிழைத்துக்கொண்டிருக்கிறது. இல் லையெனில் எப்போதே விற்பனை செய் திருப்பார்கள் என தியாகி முத்து நினைவு தின கூட்டத்தில் மதுக்கூர் ராமலிங்கம் பேரூரையாற்றினார்.  பஞ்சாலை தொழிலாளர்களின் உரி மைக்கான போராட்டத்தில் முன்னின்ற வர், செங்கொடி இயக்கம் வளர்வதை  பொருக்க முடியாத காங்கிரஸ் குண்டர் களும், ஆலை நிர்வாகமும் இணைந்து முத்துவை படுகொலை செய்தனர். ஆண்டுகள் 70 ஆனபோதும், உழைப் பாளி வர்க்கத்தின் தியாகியான முத்து  இன்றும் செங்கொடி இயக்கத்தினரால்  நினைவு கூறப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கட்சி மற் றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் உப்பிலியபாளையம் தியாகி முத்துவின் 70 ஆவது நினைவேந்தல் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்க்கு, மார்க்சிஸ்ட் கட்சி யின் ஏ.தமிழ்செல்வன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் எம்.தங்கவேல் ஆகி யோர் தலைமை ஏற்றனர். இதில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன்,  சிங்கை நகரச்செயலாளர் வி.தெய் வேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமு கம், வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன்,  மார்க்சிய அறிஞர் எஸ்.பாலசந்திரன்  ஆகியோர் உரையாற்றினர்.  மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், கோவை மண்ணிலே தொழிற்சங்க இயக்கம் துவங்கி நூறாண்டுகள் ஆகப்போகிறது. அதேபோன்றுதான் தொழிலாளர்களுக்கு எதிரான எண்ணம்  கொண்ட ஆர்எஸ்எஸ் துவங்கப்பட்டு நூறாண்டு ஆகப் போகிறது. உங்கள் இயக்கம் இன்னும் ஆட்சிக்கு வர முடிய வில்லை என ஒரு நண்பர் ஆதங்கப்பட் டார். ஆட்சிக்கு வந்து விட்டதாலயே அது சிறந்த இயக்கம் என்று கூறிவிட  முடியாது. பார்த்தீனியம் செடிகூட விரை வாக வளர்கிறது அதனால் அதனால் அந்தசெடி நல்லதாகிவிடுமா?  துளசி  செடி மெதுவாகதான் வளரும் அதனால்  நிறைய நன்மை உண்டு, பாலும் பால்டா யிலும் வெள்ளையாகத்தான் இருக்கும் பாலை சாப்பிட்டவுடன் உடனடியாக நமது உடலில் முறுக்கேறி பலம் பெற்று விடமாட்டோம். ஆனால் பால் டாயில் சாப்பிட்டால் உடலில் உடனடி யாக வாயில் நுறை தள்ளி மரணத்தின்  விளிம்பிற்கே சென்று விடுவோம். கம்யூ னிஸ்டுகள் பாலை போன்றவர்கள். கம் யூனிஸ்ட் இயக்கம் உப்பிலிபாளையம் தியாகி தோழர் முத்து போன்று பல தோழர்களின் பெரும் தியாகத்தால் உரு வானது. எத்தனை சதி வழக்குகள் எத் தனை அடக்குமுறைகளை சந்தித்து வந் துள்ளோம். கம்யூனிஸ்ட்களின் அதிக பட்ச தேவையே டீ தான். அதைபற்றி பட்டுக்கோட்டையார் பாடல்கூட எழுதிs யிருப்பார் டீ டீ பாட்டாளி தோழனுக்கு  கூட்டாளி இந்த டீ நமக்கு அதிகபட்ச தேவையே டீதான். அதேபோல் உழைப் பாளிகளுக்காக போராடி உயிர் நீத்த  தோழர் முத்து போன்ற தியாகிகள் எப் போதும் கொண்டாடடப்படுவார்கள். ஒரு சமயத்தில் வெண்மனி தியாகிக ளின் நினைவிடத்திற்கு சென்றிருந் தேன். பெரும் கூட்டம் அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தது. அதேபோன்று வெண் மனி தியாகிகளின் படுகொலைக்கு கார ணமான கோபாலகிருஷ்ணன் சமா திக்கு சென்று பார்த்தேன், அங்கு நாய் ஒன்று சிறுநீர் கழித்த இடம்போல அலங்கோலமாக இருந்தது.   உலகத்தில் உள்ள எல்லா மதவாதிக ளும் சொர்க்கம் மேலோகத்தில் இருக் கிறது என கை காட்டும்போது கம்யூ னிஸ்ட்கள்தான் நமக்கான சொர்க் கத்தை நாம் உலகிலேயே படைக்கமுடி யும் என் நிகழ்த்தி காட்டியிருப்பவர்கள். அடக்குமுறையற்ற சுரண்டலற்ற வாழ் வதற்கு தேவையான அடிப்படை வச திகளுக்கான போராட்டங்களுக்காக எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்த வர்கள் கம்யூனிஸ்ட்கள். எங்களை பிழைக்க தெரியாதவர்கள் என்று கூறு கிறார்கள் எங்களை போன்ற பிழைக்க தெரியாதவர்களால்தான் இந்த உலகம் பிழைத்துக்கொண்டிருக்கிறது. கம்யூ னிஸ்ட்கள் இல்லை என்றால் இந்தி யாவை எப்போதோ விற்றிருப்பார்கள். ஒரு சமயத்தில் இந்தியாவை முழுமை யாக விலைக்கு வாங்க வேண்டும் இதில்  ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என  கேட்க, ஆமாம் வில்லங்கம் இருக்கிறது கம்யூனிஸ்ட்கள் ஊருக்கு ரெண்டு பேர் கொடியோடு போராடுவார்கள் வாங்க விடமாட்டார்கள் என்று கூறி னார்கள் என்று நகைச்சுவையாக கூறுவ துண்டு. அது உண்மையும் கூட நாட்டை யும் உலகையும் காக்க தோழர் முத் துவை போன்று எந்தவித தியாகத்தை யும் செய்ய தயாராக இருப்பவர்கள் கம் யூனிஸ்ட்கள். இந்த மண்ணில் சமத்துவம் சோசலீமலரும், ஒரு போதும் வலதுசாரிகள் வென்ற  தில்லை நிச்சயம் இந்தியாவில் இடதுசாரி திருப்பம் வெற்றிபெறும் என் றார்.  சி.பத்மநாபன் பேசுகையில், தற் போது தொழிலாளர்களுக்கு கிடைத்தி ருக்கும் சலுகைகள் முதலாளிகள் தாமா கவே முன்வந்து கொடுத்ததல்ல. தோழர் தியாகி முத்துவை போன்ற எண் ணற்ற தியாகிகளின் போராட்டத்தால் கிடைத்தது. நம் நாட்டின் வரலாற்றில் மக்களுக்கான அடிப்படை வசதிகளுக் கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி யினரை தவிர்த்து வேறு எவரையும் அடையாளம் காட்டமுடியுமா?. நமக்கு  தேவை அடிப்படை மாற்றம்தான் ஆள்  மாற்றம் என்பதை விட கொள்கை மற் றும் சித்தாந்த மாற்றம்தான் தேவையா னது. நிரந்தர வேலை இல்லை உழைப் புக்கேற்ற ஊதியம் இல்லை. தொழிலா ளர்களோ சட்டப் பாதுகாப்பு, சலுகைக ளும் இழந்து வருகிறார்கள். அடிப்படை  தேவைகளுக்கு கூட கடன் மேல் கடன்  வாங்கி வாழ்க்கை நடத்திக் கொண்டி ருக்கிறார்கள். இந்த தொழிலாளர்களின்  அவலங்களை பற்றி அண்ணாமலை போன்றவர்கள் என்றாவது பேசியது உண்டா. தமிழ்நாட்டின் பிரதான ஊட கங்கள் தொழிலாளர்களின் அவல நிலையைப் பற்றி எழுதுகிறார்களா? இன்றைய அரசுகள் தொழிலாளர் நலத் துறை என ஒன்று இருப்பதையே நினை வில் வைத்துக் கொள்வதில்லை. போதிய ஊழியர்களை பணியில் அமர்த் தாமல் இருப்பதினால் தொழிலாளர் பிரச்சினை சம்பந்தமாக புகார்கள் வரு கிறது. இதனை தொழிலாளர் நலத்துறை  அலுவலகத்திற்கு கொண்டு சென்றால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகள் இல்லாத நிலை உள்ளது. இதைப்பற்றி அண் ணாமலையோ, விஜய் அல்லது சீமான்  போன்றவர்களோ பேசியிருக்கிறார் களா? கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் பேசுகி றோம். தொழிலாளர்கள் நலன்களில் அக்கறை கொண்டு செங்கொடி இயக் கம்தான் பேசும் என்றார்.  முன்னதாக, தியாகி முத்து நினைவி டத்தில் உள்ள செங்கொடியை சிபிஎம்  பீளமேடு நகரச் செயலாளர் கே.பாண்டி யன், சிபிஐ கிழக்கு மண்டலச் செயலா ளர் எஸ்.சண்முகம் ஆகியோர் ஏற்றினர்.  தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிக ளின் ஊழியர்கள் மலர் அஞ்சலி செலுத் தினர். முடிவில், கே. பார்த்தசாரதி நன்றி  கூறினார்.