கோவை, அக்.20- பல வருடங்களாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வரும் சமுதாயக்கூடத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வாலிபர் சங்கம் சார்பில் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை பீளமேடு செங்காளியப்பன் நகர் பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி நிதி 20 லட்சம் ரூபாயிலும், பொது நிதி 30 லட்சத்திலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சமுதா யக்கூடம் அமைக்கப்பட்டது. இந்த சமுதாயக்கூடம் பல வருடங்களாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. ஏழை எளிய மக்கள் தங்களது இல்லற நிகழ்ச்சிகளை நிதி சுமை இல்லாமலும் மகிழ்ச்சியுடன் நடத்திட சமுதாயக்கூடம் இங்கு அமைக்கப்பட்டது. ஆனால், செங்காளியப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடம் பல வருடங்களாக செயல்பாட்டில் இல்லாத காரணத்தால் அந்த சமுதாயக்கூடம் தற்பொழுது குப்பை கூடமாகவும் மது அருந்தும் இடமாகவும் காணப்படுகிறது. எனவே, செங்காளியப்பன் நகர் சமுதாயக் கூடத்தை பாது காக்கும் வகையில் உடனடியாக சுத்தம் செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கடந்த வாரம் அப்பகுதியில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. அதன் பிறகு வெள்ளியன்று கோயம் புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளரிடம் சமுதாயக் கூடத்தை உடனடியாக பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆணை யாளர் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவ தாக உறுதி கூறினார்.