“கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத் தன்மையற்ற செயலாகும். பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்ய நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது” - சென்னை உயர்நீதிமன்றம்
கோவை மாநகராட்சியில் தற்போது வரை பல இடங்களில் மனிதர் களை சாக்கடைகளில் இறக்கி கழிவுகளை அகற்றும் அபாயகரமான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங் களில் மட்டும், கோவை ரயில் நிலையம், ஆடிஸ்வீதி, சங்கனூர் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகில் என தூய்மை பணி என்ற பெயரில் வெறும் கையால் கழிவு களை அள்ளுவது, கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை நீக்குவது, கழிவுநீர் தொட்டி யில் நீர் அகற்றுவது, கழிவுகளை அள்ளு வது, அடைப்புகளை எடுப்பது என மனி தர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று கோவை ரயில் நிலையம் அருகே சில ஒப்பந்த தூய் மைப் பணியாளர்கள் வெறும் கையால் சாக் கடை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டி ருந்தனர். இதனையடுத்து, அரசு அறிவித் துள்ள 14420 என்கிற புகார் எண்ணிற்கு அழைத் தால், எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை. மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து ஒன் றிய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியுள்ளது. தமிழ்நாடு அரசும் கடந்த 2015 ஆம் ஆண்டு கழிவுகளை அகற்ற மனிதர் களை பயன்படுத்த தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றம் இது குறித்த வழக்குகளில் இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி வித்துள்ளது. அரசும், நீதிமன்றமும் சாக்க டைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய் வதை தடை செய்ய பல்வேறு சட்டமும், நீதி மன்ற தீர்ப்பும் பிறப்பித்துள்ளன. மனிதர்கள் மூலம் மலம் அள்ளுவது, கழிவு நீர் அகற்றுவது, அடைப்பு நீக்குவது போன்ற வற்றை 2013 ஆம் ஆண்டு சட்டம் தடை செய்கிறது. இச்சட்டத்தின்படி மொத்தம் 40 வகையான பாதுகாப்பு கருவிகள் வழங்கப் பட வேண்டும். அது அரசு, உள்ளாட்சி அமைப்பு, தனியார் யாராக இருந்தாலும் இவ் விதியினை பின்பற்ற வேண்டும். ஆனால், தூய் மைப் பணியாளர்களுக்கு கிழிந்து போன கையு றையை தவிர வேறு ஒன்றும் வழங்கப்படுவ தில்லை. இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டு களில் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 308. இதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 52 பேர் இப்பணியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ள னர்.
இதனிடையே மனிதக்கழிவுகளை மனி தர்களே அகற்றும் தடைச்சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தடைச் சட்டத்தின்படி மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள் ளது. ஆனால், சென்னை, திருவள்ளூர், கட லூர், மதுரை, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி மனிதக் கழிவுகளை அகற்றிய போது 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் 363 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மனிதக் கழிவு களை மனிதர்களே அகற்றும் நடைமுறை ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுவது வெறும் காகித அளவில் மட்டுமே இருக்கிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும், மனிதர்களை அந் தப் பணியில் ஈடுபடுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப் பட்டு, உயிரிழந்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல் ஆகும். இதற்குத் தடை விதித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்ட னர். இதேபோன்று மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர் உயிரிழந்தால், குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சுத்தம் செய்யும்போது விபத்து நேர்ந்து, நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள் ளது. மேலும், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முழுவதுமாக ஒழிக்கப்படு வதை உறுதி செய்ய ஒன்றிய, மாநில அரசு களுக்கு உத்தரவிட்டுள்ளது. சட்டம், அரசு உத்தரவு, நீதிமன்றத்தின் உத்தரவு எதையும் பொருட்படுத்தாமல் கோவை மாநகராட்சி நிர் வாகம் பல வருடங்களாக தொடர்ந்து அபாயகர மான இப்பணிகளை செய்து கொண்டு இருக் கிறது. அசம்பாவிதம் ஏற்பட்டால், ஆளும் மாநில அரசுக்கு மிக பெரிய கெட்ட பெயரை உருவாக்கும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறியாத என்னவோ? நீதித்துறையையும், சட்டங்களை ஒரு சேர ஏமாற்றும் போக்கு தொடர்வது அதிர்ச்சியாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி என்கிற அந்தஸ்த்தை பெற்ற கோவை மாநகராட்சி, ஊரெல்லாம் விழாக்கோலம் போல கலர் கலராக மின் விளக்குகளையும், செல்பி ஸ்பாட்டுகளையும் அமைத்து வருகிறது. மாதிரி நகரத்தில் (ஸ்மார்ட் சிட்டி) இதைவிட ரத்தமும், சதையு மாக உள்ள சக மனிதனை, மனிதனாக பாவிக் கின்ற நடவடிக்கையே அவசியமானது என்பது இன்னும் இந்த நிர்வாகங்கள் உணராமல் இருப்பது கவலை கொள்ளச்செய்கிறது. -டென்னீஸ்