districts

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 13- ஒன்றிய மோடி அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்திய மாணவர் சங்கத்தின் சிக்கண்ணா  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிளை  சார்பில் கல்லூரி நுழைவு வாயில் முன்பு செவ் வாயன்று கிளைத் தலைவர் விமல்ராஜ் தலை மையில் ஒன்றிய மோடி அரசு அமல்படுத்தி யுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண் டித்து போராட்டம் நடைபெற்றது. இதில், மாநி லத் தலைவர் தெள.சம்சீர் அகமது, மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, கல்லூரி கிளைச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட நிர் வாகிகள் கிருஷ்ணகுமார், மணிகண்டன், சப ரிநாதன், சுஜிதா உட்பட மாணவர்கள் பலர்  கலந்து கொண்டனர்.