districts

img

அகழ்வாராய்ச்சி, சாதனை விளக்க ஓவிய கண்காட்சி கோவையில் முதல்வர் தொடங்கி வைத்தார்

கோவை, மே 19-   தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி, பொருநை அகழ்வாராய்ச்சி கண் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். கோவை, வ.உ.சி. மைதானத் தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமி ழக அரசின் ஓராண்டு சாதனை  விளக்க ஓவிய கண்காட்சி மற்றும் பொறுநை அகழ்வாராய்ச்சி கண் காட்சி வியாழக்கிழமை தொடங்கி 7  நாள்கள் நடைபெறுகிறது. இதனை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று காலை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயி லாடும்பாறை உள்ளிட்ட இடங்க ளில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருள்களின் மாதிரிகள், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ஓவியங்களும் இடம்பெற்றி ருந்தன. இந்நிகழ்வில், அமைச்சர் கள் வி.செந்தில்பாலாஜி, வெள்ள கோவில் சாமிநாதன், தங்கம் தென் னரசு, அன்பரசன், கயல்விழி செல் வராஜ், தமிழக முதன்மைச் செயலா ளர் உதய சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி. ஆ.ராசா மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அதி காரிகள் உடனிருந்தனர்.