districts

img

பேரூராட்சி மன்ற சிபிஎம் உறுப்பினருக்கு முதல்வர் வாழ்த்து

அன்னூர், பிப்.24- அன்னூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்த லின் முடிவுகள் பிப்.22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திமுக 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2  இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும் வென்றது. இதனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அன்னூர் பேரூராட்சியை கைப்பற்றியது.  இதையடுத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி  வேட்பாளர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதன்ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மணி கண்டன்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  வாழ்த்து பெற்றார்.  அப்போது, அன்னூர் திமுக ஒன்றிய பொறுப்பாளர், ஆனந்தன், நடராஜ், பரமேஸ்வரன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுகுமார் அர்ஜுன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.