கோவை, ஆக. 24- கோவை விமான நிலைய விரி வாக்க பணிகள் திமுக ஆட்சியில் கூறி திமுக ஆட்சியிலேயே முடித் திருக்கிறோம், இனி இந்த விவ காரத்தில் மத்திய அரசுதான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் கணபதி ராஜ் குமார் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாக ரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சனி யன்று செய்தியாளர்களை சந்தித்த னர். அப்போது பேசிய கணபதி ராஜ்குமார் எம்பி, கடந்த ஆக.16 ஆம் தேதியன்று முதலமைச்சர், அமைச்சர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோ சனை மேற்கொண்ட பிறகு கோவை விமான நிலையத்தில் விரிவாக்கம் சம்பந்தமான நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது. ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கு மத்திய அரசிற்கு முன் நுழைவு அனுமதி அளிக்கப்பட்டு. அதனு டைய நகல் வெள்ளியன்று நமது மாவட்ட ஆட்சியருக்கு வந்துவிட் டது. கோவை விமான நிலையம் விரி வாக்கத்தை பொறுத்தவரை கடந்த 2010 இல் நில எடுப்பு பற்றி அப் போதைய திமுக அரசு முதன்முத லில் ஒரு அரசாணையை வெளி யிட்டது. பிறகு இத்தனை வருடங் கள் கழித்து இப்பொழுது மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி யில் முடிவுற்றிருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே நல்ல முடிவெடுத்துள்ளது. இந்த விமான நிலைய விரிவாக்கத்தில் தொழில் துறை அமைச்சரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. தமிழக முதல மைச்சர் சொன்னபடி வாக்குறு தியை நிறைவேற்றி விட்டார், இனி மத்திய அரசு தான் மிக விரைவாக இதை செய்து தர வேண்டும். மெட்ரோ பணிகளுக்கான அனைத்து தகவல்களையும் திரட்டி மத்திய அரசிடம் கொடுத்து விட் டோம் ஆனால், மத்திய அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. நாங்கள் கொடுத்து விட் டோம் இனி அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து அவர்களது பங்களிப்பை சொன்னால் நாங்கள் தயாராக உள் ளோம் என்றார். இதனைத்தொடர்ந்து பேட்டிய ளித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை விமான நிலைய விரி வாக்கத்திற்கு நிலம் கையகப்படுத் தியது. 662 ஏக்கர் இதில் 468.23 ஏக்கர் பட்டா நிலமாக உள்ளது. 97 சதவீகிதம் முடிந்துவிட்டது. 456 ஏக் கர் நிலத்திற்கு நாம் தற்போது அனு மதி கொடுக்கிறோம். மீதம் இருக் கின்ற நிலத்தில் பிரச்சனை உள் ளது. இந்த மாதக் கடைசிக்குள் இதனை முடிக்க டார்கெட் வைத் துள்ளோம். மேலும், புறம்போக்கு நிலம் 29 ஏக்கர் உள்ளது. அதில் 20 ஏக்கர் நிலத்தை நாம் தற்போது ஒப்படைக்கிறோம். பிரச்சனைக் குரிய இடமாக உள்ள 9 ஏக்கர் நிலத் தில் இறுதி அரசாணை தமிழக அர சிடம் இருந்து வந்த பிறகு அந்த நிலங்களையும் ஒப்படைப்போம். விமான நிலைய விரிவாக்கத்திற் காக தற்போது வரை ரூ. 1849 கோடி இழப்பீடாக கொடுத்துள்ளோம். மேலும், பைபாஸ் சாலையில் இருந்து ஒரு சாலை விமான நிலை யத்திற்கும் அவிநாசி சாலையிலி ருந்து ஒரு சாலை விமான நிலையத் திற்கும் வர வேண்டியது உள்ளது. அதற்கான நிலங்களுக்காக விமான நிலைய இயக்குனர் கடி தம் அனுப்பி உள்ளார் என்றார்.