districts

img

கூகுள் மேப்பை நம்பி ஏரிக்குள் கவிழ்ந்த கார்

சேலம், மார்ச் 25- மகுடஞ்சாவடி அருகே கூகுள்  மேப்பை நம்பி பயணித்து கொண்டி ருந்த கார் ஒன்று, ஏரிக்குள் கவிழ்ந்த சம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பரப ரப்பு ஏற்பட்டது. கேரளத்தில் இருந்து சேலம் நோக்கி  கூகுள் மேப்பை பார்த்து கார் ஒன்று  பயணித்துக் கொண்டிருந்தது. இதன் படி, அந்த கார் திங்களன்று காலை சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அடுத்த கனககிரி பகுதியில் சர்வீஸ் சாலை அருகில் உள்ள ஏரிக்குள் விழுந் தது. இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த  ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பி னார். இதனையடுத்து, தகவலறிந்த அப் பகுதிக்கு வந்த படகு இயக்கும் தொழி லாளர்கள் மற்றும் கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. சமீப காலமாக பல  பகுதிகளில் கூகுள் மேப் பார்த்து சென்ற  வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள் ளாகும் சூழல் அரங்கேறி வருவது குறிப் பிடத்தக்கது.