districts

img

அவிநாசியை அடுத்த தெக்கலூர் பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற பேருந்து

கோவை, மார்ச் 26-  கோவை மாநகராட்சியில் ரூ.9.12 கோடி  மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் மற்றும் சுகாதார ஆய்வக மைய கட்டிட பணிகளை  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சனியன்று துவக்கி வைத்தார்.  கோவை மாநகராட்சியில் 28 ஆவது வார்டு இளங்கோ நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வகம் கட்டுவதற் கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் அவ்வார்டின் மாமன்ற உறுப்பினரான மார்க்சிஸ்ட் கட்சி யின் கண்ணகி ஜோதிபாசு, சிபிஎம் பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன், நகரக் குழு உறுப்பினர்கள் மேகநாதன், ஜோதி பாசு மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று கோவை மாநகராட்சி 12 ஆவது வார்டுக்குட் பட்ட  சின்னவேடம்பட்டியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டும் பணி நடை பெற்றது. இதில் அவ்வார்டின் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் வி.இராம மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.

இதைத்தொடர்ந்து, 26 ஆவது வார்டு பீளமேடு பயனீர் சாலையில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வக மையம் மற்றும் விளாங்குறிச்சி, வெள்ளக்கிணறு விசுவாசபுரம், சின்னவேடம்பட்டி, அப்ப நாயக்கன்பாளையம், கவுண்டம்பாளை யம், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதி களில் ஆரோக்கிய மையம் கட்டும் பணி களுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அடிக்கல் நாட்டினார். இதன்பின்னர், முத்தண்ண குளத்தில் தார்சாலை புதுப்பித்தல் பணியை துவக்கி வைத்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தமிழக முதல் வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சாலை மற்றும்  63 சுகாதார கட்டிடங்களுக்கு 15.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.  ரூ.8.18 கோடிக்கு ஏற்கனவே பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது 7.14 கோடி ரூபாய்க்கு பணி கள் துவங்கப்பட்டுள்ளது என்றார்.  மேலும், மாநகராட்சியில், குப்பை எடுக்க கூடுதல் வாகனங்கள் வாங்க 107  வாகனங்களுக்கு ரூ.7.50 கோடி நிதிக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.  

மின்பராமரிப்பு பணிகள் தொடர்ந்து வருகிறது. கோவை  மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் சாலைகள் உரிய பராமரிப்பு செய்யப்படா மல் இருந்தது. தற்போது சாலைகள் புதுப் பிக்கப்பட்டு வருகிறது. 8905 மின்மாற்றிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார். இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட் சிக்கு உட்பட்ட 13 வார்டுகளில் ரூ 9.12 கோடி  மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல்  நாட்டியும், முடிந்த பணிகளையும் துவக்கி வைத்தார். மேலும், கோவை மாநகராட்சிக்கு, தமிழ்நாடு நிலையான நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34.93 கோடி மதிப்பீட்டில் 51.35 கிலோ  மீட்டர் நீளத்திற்கு 205 எண்ணிக்கையிலான சாலை பணிகள் அமைக்கும் பணி களுக்கு அனுமதி பெறப்பட்டது. இதில் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் 6.07 கிலோ மீட்டர் நீளத்திற்கு 8.18 கோடி மதிப்பீடில் 4 சாலை பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.