திருப்பூர், டிச.2 - திருப்பூரில் பெண் பயணிகளை ஏற்றாமல் செல்லும் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செங்கப்பள்ளி வரை சென்று வரும் வழித்தடம் எண் 55, பேருந்து எண் (டி என் 38 1256)என்ற பேருந்து புதன்கிழமை காலை 8.10 க்கு நெருப்பெரிச்சல் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. பேருந்தில் ஏறுவதற்காக 15-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்றபோது பேருந்து நடத்து னர், பின்னால் வரும் பேருந்தில் ஏறிச் செல்லுங்கள் என்று சொல்லி விசிலை ஊதி விட்டார். உடனே பேருந்து புறப்பட் டது. பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுவது போல் ஒதுங்கி விட்டனர். இதை பார்த்து சம்பவ இடத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, சம்பந்தப்பட்ட பேருந்தை நிறுத்த சொல்லி, ஏன் அவசரமாக எடுத்துச் செல்கிறீர்கள்,
பேருந்தில் இடம் இருக்கிறபோது ஏன் அவர்களை ஏற்றாமல் செல்கிறீர்கள் என்று கேட்டிருக் கிறார். அப்போது, ஓட்டுநர் பேருந்திலிருந்து வேக வேகமாக இறங்கி வந்து, “உனக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை “.”யாருக்கு வேண்டுமானாலும் கம்ப் ளைன்ட் பண்ணிக்கோ” என்று சற்றும் பொறுப்பில்லாமல், அதிகார தோரணையில் தரமற்ற வார்த்தைகளை சொல்லி விட்டு பயணிகளையும் ஏற்றாமல் பேருந்தை எடுத்துச் சென்றுவிட்டார். மேற்படி பேருந்து தொடர்ந்து பலமுறை வாவிபாளையம், நெருப்பெரிச்சல், தோட்டத்துபாளையம் பேருந்து நிறுத்தங்களிலும் இதேபோல பெண்கள் அதிகம் இருக்கிற வேலை நேரத்தில் நிற்காமல் செல்வது வாடிக்கை யாக உள்ளது. தமிழக அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவ சமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று திட்டத்தை அறிவித் தபோதும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இவ்வாறு நடந்து கொள்வது தொடர்கிறது. எனவே உயரதிகாரிகள் சம்பந்தப் பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல உரிய உத்த ரவு பிறப்பிக்க வேண்டும் என திருப்பூர் அரசுப் போக்குவ ரத்து கிளை மேலாளருக்கு ஆ.சிகாமணி புகார் கடிதம் அனுப் பியுள்ளார்.