districts

img

குப்பைக்கிடங்காக காட்சியளிக்கும் சுடுகாடு!

தருமபுரி, ஜன.11- கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் மலைபோல் குவிந்துக்கிடக்கும் குப்பைகளால், சுகாதார சீர்கேடு ஏற்படு வதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சியில் 15 வார்டு கள் உள்ளன. இங்கு அதிகளவில் ஏழை, எளிய மற்றும் அன்றா டம் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டில் கொட்டப்படு கிறது. இதனிடையே குப்பைகளை பிரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அதனை செயல்படுத்தாமல், சுடுகாட்டில் குப்பைகள் கொட் டப்பட்டு வருகிறது. இதனால் மலைபோல் குப்பைகள் குவிந் துள்ளன. சுடுகாட்டின் அருகே உள்ள கலைஞர் நகர் மற்றும் வீரகவுண்டனூர், ஆதிதிராவிடர் குடியிருப்பு மற்றும் இஸ்லா மிய மக்கள் வசித்து வருகின்றனர். சில நேரங்களில் குப்பை களுக்கு தீ வைக்கப்படுவதால், நச்சுக்காற்றால் அப்பகுதி பொதுமக்கள் மூச்சு விடுவதற்கே பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைகாலங்களில் கடுமையான துர் நாற்றம் வீசுகிறது. சுடுகாட்டில் நாளுக்கு நாள் குப்பை குவிவ தால் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய முடியா மல் போகும் நிலை உள்ளது. எனவே, சுடுகாட்டில் குப்பை  கொட்டுவதை பேரூராட்சி நிர்வாகம் கைவிட்டு, குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலம் தரம் பிரிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.