districts

காணாமல் போன திருநம்பி வழக்கில் திருப்பம்

கோவை, டிச.22- சூலூரில் காணாமல் போன திரு நம்பி கொலை வழக்கில், இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வேலை கொடுத்த முதலாளியே கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பச்சகவுண்டம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தேனி யைச் சேர்ந்த கவி. திருநம்பியான இவர், இன்னொரு திருநம்பி ஜீவா  மற்றும் வைதேகி என்ற பெண்ணு டன் அறை எடுத்து வசித்து வந்துள் ளார். இவர்கள் மூவரும் திருப்பூர்  மாவட்டம் மூங்கில் தெழுவு பகுதி யைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் அவரது தம்பி ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சொட்டுநீர் பாசனம்  அமைக்கும் பணியில் காண்ட் ராக்ட் லேபர்களாக வேலை செய்து  வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி  மாதம் முதல் திருநம்பி கவியை  காணவில்லை என உடன் தங்கி யிருந்த வைதேகி ஜன.8ஆம் தேதி  சுல்தான் பேட்டை காவல் நிலை யத்தில் புகார் அளித்திருந் தார். போலீசார் காணாமல் போன  கவியை தேடி வந்தனர். இது  தொடர்பாக, சந்திரசேகர் மற்றும் ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதை யடுத்து இருவரும் தலைமறைவா கினர். இதில் சந்தேகமடைந்த போலீசார், சேலம் பகுதியில் பதுங்கி இருந்த சந்திரசேகரை கைது செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், ராதாகி ருஷ்ணன் கொலை செய்திருக்க லாம் என போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து தலை மறைவாக இருந்த ராதாகிருஷ்ண னையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில், மனைவி இல்லாத தனது அண்ணன் சந்திரசேகரனுக்கு வைதேகியை திருமணம் செய்து  வைக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு திருநம்பி கவி இடை யூறாக இருப்பதாக கருதி, அவரை  கொலை செய்ய திட்டமிட்டேன்.  தொடர்ந்து, பச்சகவுண்டம்பா ளையத்தில் உள்ள தோட்டத்துப் பகுதிக்கு வரவழைத்து, கிணற்றில் நீரேற்ற வைக்கப்பட்டிருந்த மின் சார கம்பியை கவி மீது பாய்ச்சி கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை குடிமங்கலம் அருகே உள்ள சவுக்கு தோப்பில்  வைத்து எரித்து, சாம்பலை பிஏபி  வாய்க்காலில் கரைத்ததாக வாக் குமூலம் அளித்தார். இதனைய டுத்து ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் நேர்நி றுத்தி சிறையில் அடைத்தனர்.