districts

img

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 60 சதவிகிதம் நிறைவு

கோவை, ஜூன் 15– பில்லூர் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தமிழக நகர்ப்புற அமைச்சர் கே.என்.நேரு தெரி வித்துள்ளார். கோவை மாநகராட்சியில் சிறுவாணி, பில் லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வட வள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. ரூ.779 கோடியில் 3 ஆவது பில்லூர் குடி நீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகி றது. மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெரு மாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உட்பட பல்வேறு கட்டுமான பணி கள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மக்களுக்கு தடை யின்றி குடிநீர் வழங்க முடியும். இதன் மூலம் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 3 ஆவது குடிநீர் திட்டத் துக்கு தண்டிபெருமாள்புரம் பகுதி கட் டாஞ்சி மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு பிப்ர வரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத் தில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முடிவடைகிற நிலையில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  தலைமை யில், குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல் படுத்துவது குறித்து மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் புதனன்று நடைபெற்றது. இதில், தொழிலாளர் நலன்  மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச் சர் சி.வி.கணேசன், கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட் சியர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று  வரும் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பில்லூர் குடிநீர் திட்டப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் 178 எம்எல்டி தண்ணீர் கிடைக்கும். இரண்டு மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. பில்லூர் அணையின் சேற்றை அகற்ற துறை அமைச்சரிடம் பேசி நடவ டிக்கை எடுக்கப்படும். தற்போது பில்லூர் குடிநீர் திட்டப்பணிகள் 60 சதவிகிதம் நிறை வடைந்துள்ளதாக, அமைச்சர் நேரு தெரிவித்தார்.

திருமண உதவித்தொகை உயர்வு
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து தொழிலாளர் நலத் துறை சார்பில், ரூ.13 கோடியே 82 லட் சத்து 49 ஆயிரத்து 250 மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இக்கூட் டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, பி.ஆர்.நட ராஜன் எம்.பி., கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா, மாநக ராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தொழிலாளர்களுக்கு நீண்ட நாட்களாக விடு பட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருமண உதவித் தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள் ளது. விபத்து இழப்பு நிவாரண நிதி ரூ.ஒரு லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு 75 ஆயிரம் தொழிலாளர்க ளுக்கு 24 மணி நேரத்திற்குள் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின் 57 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அடுத்த கட்டமாக நிதி உதவி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தீர்வு காணப்படாத பிரச்சனைகள் 25 நாட் களுக்குள் தீர்வு காணப்பட்டு, ஒரு லட்சத்து  7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு விடுபட்ட தொகைகள் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்திற் குள் நிவாரண உதவிகள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காவிட்டால் அரசு அலுவலகத்தில் முறையிடலாம், என்றார்.