“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவருக்கு மாடல்ல மற்றை யவை” எப்படியேனும் கற்றிட வேண் டும் சமூக மாற்றம் கல்வி என்னும் சாவியை கொண்டு திறக்கப்பட வேண்டும் சமூகத்தில் பின்தங்கிய பிள்ளைகள் வாழ்வில் முன்னேற் றம் அடைய கல்வி ஒன்றே பேராயு தம் என்பது வெறும் வார்த்தை மட்டு மல்ல அது வாழ்க்கை மேம்பாட்டு தத்துவம். நீலகிரி மாவட்டம் வெறும் மலை களாலும், மரங்களாலும் சூழப்பட்ட தன்று. அது மலைகளோடும் மரங் களோடும் உயிரும் உணர்வுடனும் கலந்த பழங்குடி மக்களாலும் சூழ்ந்ததாகும். நீலகிரி மாவட்டத் தில் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக மாவட் டம் முழுவதும் 1952 முதல் 1962க்குள் அரசு பழங்குடியினர் உண்டு உறை விட பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆரம்பகட்டத்தில் பள்ளிக்கூ டங்களுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாக இருந்தது.
இன்று ஓரளவுக்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பிள்ளைகளை எப்படி யோனும் சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் ஆசிரியர்கள் தான். மற்ற பள்ளியை காட்டிலும் பழங்குடியினர் பள்ளி சற்று வித்தியாசமானது பிள்ளை களை ஆசிரியர்கள் வீடு தேடி சென்று அழைத்து வரும் சூழல் இருந்தது. இன்றும் ஓரிரு இடங் களில் ஆசிரியர்கள் வீடு தேடி சென்று பிள்ளைகளை அழைத்து வரும் நிலையே உள்ளது. உண்டு உறைவிட பள்ளி என்ப தால் அனைத்து வசதிகளும் பள் ளிகளில் அரசானது ஏற்பாடு செய் துள்ளது வறுமையிலும் சுகாதார மற்ற சூழலிலும் வாழும் பழங்குடி யின மாணவர்கள் தரமான உண வையும் பாதுகாப்பான சுகாதார மான இருப்பிடத்தையும் தங்கள் வாழ்நாளில் முதன்முறையாக பழங்குடியினர் பள்ளியிலேயே கண்டனர் என்றால் அது மிகை யல்ல. நீலகிரி மாவட்டம் முழுவதும் 15 பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்ப பள்ளிகள் 8 நடுநிலைப் பள் ளிகள் 3 உயர்நிலைப் பள்ளிகள் 2 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்ப டுகின்றன. இந்த பள்ளிகளில் பல பழங்குடி யின கிராமங்களில் இருந்து மாண வர்கள் பாடம் பயின்று வருகின்ற னர். அந்தப் பள்ளிகளில் பழமையா னது முதன்மையானதும் தேவாலா பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி ஆகும். தேவாலா பழங்குடியினர் பள்ளி கூடலூர் வட்டம் தேவாலா கிரா மத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் இந்த பள்ளி, ஓலை குடிசையில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு சில மாணவர்களே இங்கு பாடம் பயின்று வந்தனர். நாளடைவில் பள்ளி ஆனது வளர்ச்சி பெற்று தேவாலா முதல் நாடு செல்லும் நெடுஞ்சாலையில் சொந்த கட்டி டத்தில் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் தேவாலா சுற் றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல பழங்குடியின மாணவர்கள் பாடம் பயின்று வந்தனர். இந்த பகுதியை சார்ந்த பல ஆசிரியர் களை, அரசு ஊழியர்களை, அரசி யல் தலைவர்களை, நகர் மன்ற, சட் டமன்ற உறுப்பினர்களை உருவாக் கிய பெருமை தேவாலா அரசு பழங் குடியினர் உண்டு உறைவிட உயர்நி லைப் பள்ளிக்கு உண்டு. கூடலூர் முதல் கள்ளிக் கோட்டை வரை செல்லும் நெடுஞ் சாலை துறை சாலையின் மிக அருகாமையில் பள்ளி கட்டிடம் இருப்பதால், ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் பிள்ளைகள் விபத்தில் சிக்கி விடுவார்களோ என்கிற நிலை இருந்து வந்தது. இந்நிலையில்தான், பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில், தேவால முதல் பந்தலூர் செல்லும் சாலையில் அரசு நிலம் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று 2012 ஆம் ஆண்டு இது தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்கான இடம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. புதிய கட்டிடம் 2016 ஆம் ஆண்டு பள்ளிக்கான புதிய அழகிய அனைத்து வசதிக ளுடன் கூடிய கட்டிடம் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து தமி ழக அரசால் கட்டப்பட்டது. பழைய பாதுகாப்பாற்ற கட்டிடத்தில் பாடங் கள் பயின்ற பழங்குடியின மாண வர்கள் நமக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு விட்டது, நாம் அங்கு சென்று பாடங்கள் பயில்வோம் என் கின்ற ஆசையில் இருந்தனர். ஆனால், மாணவர்களின் நல னுக்காக கட்டப்பட்ட பள்ளி கட்ட டம் ஏழண்டுகள் கடந்த பின்னும் இன்றளவும் திறக்கப்படவில்லை. அரசு நிதி மற்றும் மக்களின் எதிர் பார்ப்பு இரண்டும் வீணடிக்கப்பட்டு வருகின்றது. தற்போது,
புதிய கட் டிடத்தை சுற்றியும் புதர் மண்டி கிடைக்கின்றன. மாணவர்கள் மற் றும் பெற்றோர்கள் உடனடியாக பள்ளியை திறக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இது நாள் வரை பள்ளி கட்டடம் திறப்பு விழா செய்யப்படவில்லை. வாலிபர் சங்கத்தின் போராட்டம் இந்நிலையில்தான், பழங்குடி யின மாணவர்களின் மேம்பாட் டிற்கு கல்வி மிக அவசியமான ஒன்று என்கின்ற அடிப்படையில் பள்ளி கட்டிடம் உடனே திறந்து செயல்பட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராட்டங்களை முன் ்னெடுத்து வருகிறது. இப்போராட் டத்திற்கு பொதுமக்கள், மாணவர் கள், வியாபாரிகள் என பலர் முன் வந்து கையொப்பமிட்டனர். ஒரு சிறிய கிராமப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கையெழுத் துக்கள் இட்டுள்ளனர். அனைவரது நோக்கம் ஒன்றுதான், பள்ளி கட் டடம் திறக்கப்பட வேண்டும். வாழ்க்கையே போராட்டமான பழங்குடியின மாணவர்களின் சூழ லில் தரமான கட்டடத்தில் பாடங் கள் பயில போராட வேண்டி உள் ளது. பிள்ளைகளின் கல்வியை உயர்த்தும் நோக்குடன் புதிதாக கட் டப்பட்ட கட்டடம் திறப்பு விழாவிற் காக காத்துக் கிடக்கின்றது. அரசும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக ளும் உடனடியாக தலையிட்டு அந்த பள்ளி கட்டிடத்தை திறந்து செயல்ப டுத்த வேண்டும். இராசி இரவிக்குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பந்தலூர் ஏரியா செயலாளர், நீலகிரி மாவட்டம்