கோவை, ஜூன் 27- விதவிதமான பூக்களில் உள்ள வண்ணங்கள் எப்படி அழகோ அது போலத்தான் பல எண்ணங்கள் இருப் பது தான் இந்தியாவிற்கான அழகு. இந்த பன்மைத்தன்மையை பாதுகாப் பதற்காகத்தான் தமுஎகச போரடு கிறது என கோவையில் நடைபெற்ற கலை இரவு நிகழ்ச்சியில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றி னார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேடைக்கலைவானர் தோழர் என்.நன் மாறன் திடலில் கலை இரவு நிகழ்ச்சி துவங்கியது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தமு எகச மாநிலத் தலைவர் (பொ) கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் பேசியதா வது: அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்ட ஜூன் 25 ஆம் தேதி என்பது இந் திய வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்ட வரைவுக்குழு தலைவராக இருந்து உருவாக்கிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு, ஒரு சர்வாதிகார ஆட்சி துவங்கிய நாள். மறைந்த பிரதமர் இந் திராகாந்தி அவசர நிலை பிரகட னத்தை நேரடியாக அறிவித்தார். ஆனால், தற்போது அறிவிக்காம லேயே அவசர நிலை பிரகடனம் இருக் கிறது. ஒருபுறத்தில் அவர்கள் (ஒன்றிய பாஜக அரசு) அக்னி பாதையை காட்டு கிறார்கள். ஆனால், நாம் “பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளு வன் சமத்துவத்தை முன்வைத்து, பன் மைத்துவத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். ரௌத்திரம் பழகு என் றான் பாரதி. அவர் சொன்னது போல் கோபம், சமூக கோபமாக மாற வேண் டும். இங்கு நடைபெறும் அநீதிக்கு எதி ராக கோபப்பட வேண்டும். கோபம் என்பது பெருங்கோபமாக மாற வேண் டும்.
இந்திய கால்பந்தாட்ட கழகத்தில் ரூ.15 லட்சத்தில் ஜோதிடர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்து ஆட் டத்திற்கும், ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்? இது ஒரு புறமிருக்க தற்போது பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் என்பது கிடையாது. நீங் கள் எந்த தகுதி படைத்தவராக இருந்தா லும் உங்களுக்கு சம்பளம் வெறும் 7 ஆயிரத்து 500 ரூபாய் மட்டும் தான். பள் ளிப்பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு ரூ.7 ஆயிரத்து 500 சம்பளம். ஆனால், ஜோதிடம் பார்ப்பதற்கு ரூ.15 லட்சம் சம்பளம். நாட்டில் நிரந்தரம் என்பதே கிடையாது. ஆசிரியரும் நிரந்தரம் இல்லை. ராணுவ வீரர்களும் நிரந் தரம் இல்லை. இந்தியாவில் வேலை யின்மை என்பது அதிகரித்து வருகி றது. கவிஞர் நா.முத்துக்குமார் சொன் னது போல, “உலகத்தில் நீளமானது வேலையற்ற ஒருவரின் பகல் நேரம் தான்” என்ற வார்த்தை மெய்யாகி போனது. தற்போது பிரதமர் மோடி, அவர் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி ஆனவுடனேயே, குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர்கள் படு கொலை வழக்கை நடத்திய சமூக நீதி போராளி டீஸ்டா உள்ளிட்டோரை கைது செய்து இருக்கிறார்கள். ஒருபுறத்தில் வழக்கில் தவறான ஆதாரம் கொடுத்ததாக கூறி சிறையில் அடைத்து விட்டு, மறுபுறம் ஜனநாய கம் பற்றி பேசுகிறார்கள். தற்போது நாட்டில் கலைஞர் தான் மக்களின் மன நிலையை அமைதிப்படுத்திக் கொண் டிருக்கிறார்கள். இந்த சமூகத்தின் மன சாட்சி கலைஞர்கள் மற்றும் எழுத்தா ளர்கள். அதனால் தான் தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்றவர்களை கொலை செய்தார்கள். கலைஞர்கள் ஒரு பண்பாட்டு போராளிகள். எதை சாப்பிட வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? எந்த மொழி பேச வேண் டும் என்று பிரச்சனையை தூண்டி விடு கிறார்கள். இந்தியா என்பது மதச்சார் பற்ற நாடு. உதகை மலர் கண்காட்சி யில் பல்வேறு நிறங்களில் மலர்கள் இருப்பதுபோல, பல எண்ணங்கள் இருந்தால் தான் இந்தியாவிற்கு அழகு. அப்படிப்பட்ட பன்மைத் துவத்தை பாதுகாக்க தமுஎகச தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் ஆயிரம் சட்டங் களைப் போட்டாலும், மக்கள் மனதில் ஊடுருவி கொண்டு இருக்கும் எங்க ளது படைப்புகளை அளிக்க முடி யாது.
இங்கு யார் எந்த மொழி வேண்டு மானாலும் பேசட்டும். ஆனால், அனைத்து மக்களின் மொழி இந்திய ஒற்றுமை மொழியாக இருப்பது தான் தமுஎகசவின் விருப்பம். தமிழர் உரி மையை உரிமை என்று சொல்வது தேச ஒற்றுமைக்கு எதிரானதல்ல. இந்த இனங்கள் சேர்த்து இந்தியாவை கட்டி அமைப்பதுடன், மொழிகளின் சமத்து வத்தில் இந்தியா நிமிர்ந்து நிற்க வேண் டும், என்றார்.