திருப்பூர், அக்.27– பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் என்பது மனிதகுலத்துக்கு எதிரான தாகும். இதை தடுத்து நிறுத்த உலகம் முழுவ தும் ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனக ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு எதிராக திருப்பூர், காங் கேயம் சிடிசி கார்னரில் ஒருங்கிணைந்த இஸ் லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் ஷாஹீன் பாக் போராட்டக்குழு சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் ஏ.ஹாலிதீன் தலைமை ஏற்றார். துணைத்தலைவர் ஜெ. அஸ்லம் வரவேற்றார். இதில் பங்கேற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகையில், பாலஸ்தீனத்தின் மீது தொடுக்கப்படும் தாக் குதல் என்பது இஸ்லாமியர்கள் மீது நடத் தப்படும் தாக்குதல் என்று மற்றவர்களோ அல்லது நாமோ பேசுவது பொருத்தமான தல்ல. ஏனென்றால் பாலஸ்தீனத்திற்கான போராட்டம் என்பது மனிதகுல போராட்டத் தின் ஒரு பகுதி. இன்று காசாவை முற்றுகை யிட்டு இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் என் பது மனிதகுலத்தின் மீதான யுத்தம் ஆகும். இதற்கு எதிராக பிரான்ஸ், ஐரோப்பிய நாடு கள், அமெரிக்கா மட்டுமல்ல, இஸ்ரேலிலும் ஜனநாயக சக்திகள் கண்டனக் குரல் எழுப் பிப் போராடி வருகின்றனர். எனவே உலக நாடு களில் ஜனநாயகத்தை விரும்பும் அனை வரும் ஒன்றிணைந்து பாலஸ்தீனத்திற்காக நிற்க வேண்டும். இஸ்ரேல், பாலஸ்தீனம் பிரச்சனையில் நரேந்திர மோடி நம் நாட்டின் நீண்ட நெடுங் கால வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக பேசியிருக்கிறார். அதானி இஸ்ரேலுடன் இணைந்து துறைமுக ஒப்பந்தம் போட்டிருக் கிறார். எனவே, மோடி பேசுவது காரண மில்லாமல் இல்லை. தில்லியில் இஸ்ரேல் தூதரகத்துக்கு முன்பாக சங்கிகள் திரண்டு எங்களை இஸ்ரேலுக்கு ஆதரவாக, அங்கே அனுப்புங்கள் என்று கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் கருத்தை விதைக் கிறார்கள். இங்கே மார்க்சிஸ்ட் கட்சி பாலஸ் தீனத்திற்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இது வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது என்று அனுமதி மறுக்கிறார். பாலஸ்தீன மக்கள் அவர்களின் தாய்நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சொந்த நாட்டில் இருந்து விரட்டும்போது, அதற்கெதி ரான போராட்டம் கட்டாயம் நடந்தே தீரும். காசா, மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் ஆகியவை அடங்கிய பாலஸ்தீனம் என்பதை அங்கீகரித்தால்தான் இந்த மோதல் முடி வுக்கு வரும். ஜெர்மனியில் ஹிட்லர் பெரும்பான்மை வாதம் பேசி யூதர்களை விரட்டியடித்த போது,
இங்கிருந்த ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் ஜெர்மனி நமக்கு வழிகாட்டு கிறது என்றார். இப்போது இஸ்ரேல் பாலஸ் தீனத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தும்போது இப்போது யூதவெறிக்கு அதே சங்கிகள் ஆத ரவளிக்கிறன்றனர். ஒரேயொரு மனிதன் அடி மைப்பட்டு கிடக்கும் வரை சுதந்திரத்திற்கான போராட்டம் நடந்தே தீரும். இஸ்ரேல் நடத்து வது மனிதகுலத்துக்கு எதிரான போர். போர் என்றாலே நெறிமுறை இல்லாததுதான். கொலைகளை செய்வதற்கு என்ன நெறி முறை இருக்கிறது? பாதிக்கப்படுவோர் எந்த மதம் என்பது முக்கியமல்ல. நாடற்றவர்களுக் காக போராடும்போது, நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். உலக மக்கள் ஒன்று பட்டு போராடி பாலஸ்தீனர்களின் தாய்நாட்டு உரிமையை அங்கீகரிக்கச் செய்ய வேண்டும். அதற்கேற்ப இந்திய மக்களின் கருத்துகளை நாம் திரட்ட வேண்டும், என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து மதி முக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.நாக ராஜன், காங்கிரஸ் கட்சியின் மாநில சிறு பான்மை பிரிவு துணைத்தலைவர் அலீம் அல் புகாரி, ஜமாத் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் முஹம்மது யூசப் சலாமி ஆகி யோர் உரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் கட் சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் பி. மோகன், ஆர்.ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், முஹம்மது அப்துல் லாஹ் நன்றி கூறினார்.