உடுமலை ஜூலை 15- திருப்பூர் மாவட்டம் உடுமலை கொடிங்கியம் பேருந்து நிறுத்தம் அருகி லிருந்த பசுமையான மரத்தை வெட்டிய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். உடுமலை தாலூக்கா கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தும் அருகில் நல்ல பசுமையான மரம் இருந்து உள்ளது. இந்த மரத்தின் கீழ் பொதுமக்கள் அமர இருக்கைகளை ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று காலை மரம் வெட்டப் பட்டு இருந்ததைப் பார்த்த பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வரு வாய் மற்றும் காவல்துறைக்குப் புகார் தெரிவித்தார்கள். இதையடுத்து அங்கு வந்த அதிகா ரிகள் மரத்தை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள். இது குறித்து வருவாய்த்துறை அதி காரிகளிடம் கேட்ட போது பொதுமக் கள் பயன்படுத்தும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மரம் வைக்கப்பட்டு பராமரித்து வந்துள் ளார்கள். மரம் வெட்டப்பட்டதாகக் கிடைத்த புகாரின் படி ஆய்வு மேற் கொண்ட போது மரம் இருந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமா னது எனத் தெரியவந்துள்ளது. நெடுஞ் சாலைத்துறையிடம் புகார் தெரிவிக் கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதி காரிகள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாம் அனைவருக்கும் பயன்படும் வகையிலிருந்த மரத்தை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவ ரின் கோரிக்கையாக உள்ளது.