districts

img

மதவாத பாஜகவை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம்

சேலம், அக்.8- மதவாத பாஜகவை வீட்டுக்கு அனுப்புவதே எங்களது நோக்கம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள் ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஏற்காட் டில் நடைபெற்றது. இதன்பின் அக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறு கையில, வரும் நாடாளுமன்றத் தேர் தலில் திமுக கூட்டணியில் வாழ்வு ரிமை கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கி தர வேண்டும்  என தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை சம்பந்தமாக பேசப் படும், என்றார். ஒன்றிய அரசை எதிர் பார்க்காமல் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சாதி வாரி கணக்கெடுப்பு நடத் தியதுபோல, தமிழக அரசு போர்க் கால அடிப்படையில் சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும். நெய் வேலி, கடலூர் சிப்காட் பாதிப்பால் அங்கு வாழும் மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கழிவு களை நேரடியாக கடலில் கலப்ப தால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப் படைகிறது. எனவே, அபாயகரமான ஆலைகளை கண்டறிந்து, தமிழ்நாடு அரசு அந்த ஆலைகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண் டும். என்எல்சிக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். பவானி, ஓமலூர் சுங்கச் சாவடி சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வருகின்றன. அவற்றை உடனடியாக மூட வேண்டும். காவிரி சரபங்கா திட் டத்தை விரைந்து நிறைவேற்ற வேண் டும். ‘காவிரி நமது பிறப்புரிமை’ என்ற நோக்கில் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசும், தமிழக அரசும் அனுமதி அளிக்கக்கூடாது. நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் பயணிக்கிறோம். ஜன நாயக சக்திகளோடு தொடர்ந்து பய ணித்து, மதவாத, பாசிச பாரதிய ஜனதா கட்சியை வீட்டுக்கு அனுப்பு வதே எங்களது நோக்கம், என்றார்.