உதகை, செப்.9- நீலகிரியில் உள்ள அல்லி மாயார் பழங் குடியின மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பவானிசாகர் வன சோதனை சாவடி வழியாக கொண்டு செல்ல தடை விதித்துள்ளதால் பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடைக்கோடியில் அல்லி மாயார் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டம் சந்திக்கும் இடத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த கிராமம் உள்ளது. இங்கு 70 க்கும் மேற்பட்ட இரு ளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகிய தொழில்களை செய்து வருகின்றனர். இம் மக்கள் சொந்த வேலை, அரசு அலுவலகங் கள் சம்பந்தப்பட்ட வேலை, மருத்துவம் மற் றும் உயர் கல்வி, தாங்கள் விளைவிக்கும் விவசாயப் பயிர்களை விற்பனை செய்தல் என அனைத்திற்கும் சுமார் 15 கிலோமீட் டர் தொலைவில் உள்ள பவானிசாகர் பகு திக்கு வந்து தான் செல்ல வேண்டும். நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இந்த மக்களுக்கு தார் சாலை என்பதே அமைக்கப்படாத நிலையில் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் தினுள் உள்ள வன சாலையில் தினந்தோறும் சென்று வருகின்றனர். வனவிலங்குகளின் அச்சத்திற்கு இடையே குண்டும் குழியுமான மண் சாலையில் இந்த மக்கள் சென்று வர பவானிசாகரில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பழங்குடியின மக்கள் தங்கள் விளை நிலங்களுக்கு தேவையான உபகரணங்க ளையும், வீடுகளை சீரமைக்க தேவையான சிமெண்ட் கம்பங்கள், தகரம், கம்பி, நெகிழி போன்ற கட்டுமானப் பொருட்களையும் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர். பழங்குடியின மக் கள் கொண்டு செல்லும் பொருட்களை காரக் கொரை வனத்துறை சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்து வருகிறனர். இதனால், அதிருப்தி அடைந்த அல்லி மாயார் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஊர்தலைவர் ரங்கசாமி தலைமை யில் திங்களன்று உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாயை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர் களது கோரிக்கையை கேட்டறிந்த ஆட்சியர் உடனடியாக பழங்குடியின மக்கள் தங்க ளுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி களிடம் தெரிவிக்கப்படும் என உறுதியளித் தார்.