districts

img

சாதியை இழிவுபடுத்தி மிரட்டிய ஆதிக்க சாதியினர் நடவடிக்கை எடுக்க தீ.ஒ.முன்னணி வலியுறுத்தல்

ஈரோடு, ஜன.12- பெருந்துறை அருகே அருந்ததிய சமு தாயத்தை சேர்ந்தவரை சாதி ரீதியாக துன் புறுத்திய ஆதிக்க சாதியினரை வன்கொ டுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய  வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட் டம், கருமாண்டி செல்லிபாளையம் பேரூ ராட்சி, திருவேங்கடம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த பழனிச்சாமி, அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்நிலை யில், கடந்த 31.12.2021 ஆம் தேதியன்று சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த  லாரி உரிமையாளர் தமிழ்வாணன் என்பவரும், அவரது உறவினர் விவின் என்பவரும், பழனிச்சாமியை சாதியைச் சொல்லித் திட்டி இழிவுபடுத்தி உள்ளார். மேலும், குடியிருக்கும் திருவேங்கிடம்பாளையம் அரிஜன காலனி பகுதியினை தீயிட்டுக் கொளுத்தி விடுவோம் எனவும் மிரட்டி யுள்ளனர்.  எனவே, சாதி ரீதியாக துன்புறுத்திய வர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது  செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாதிக் கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில், மேற்கண்ட கோரிக் கையை வலியுறுத்தி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பெருந்துறை காவல் உதவி கண்காணிப் பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா செயலாளர் கே.ரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பி.பழனிச்சாமி, மாண வர் சங்க மாவட்ட செயலாளர் செ.நவின் குமார், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன் ஆகியோர் உடனி ருந்தனர். இப்புகார் மனுவை பெற்று  கொண்ட காவல் உதவி கண்காணிப்பா ளர், இதுகுறித்து விசாரணை மேற் கொண்டு குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவர் என உறுதியளித் தார்.