கோபி, டிச.5- சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கத்தை பணிக்காலமாக முறைப்ப டுத்தி ஆணை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோட் டத் தலைவர் முருகவேல் தலைமை ஏற்றார். கோட்டச் செயலாளர் கருப்புசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கதிரவன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் விஜய மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில், தலைமை பொறியாளர் இரா.சந்திரசேகரை கண்டித் தும், 41 மாத பணி நீக்கத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். விதிகளுக்கு புறம்பாக சாலை பணி யாளர்களின் முதுநிலை பட்டியலை வெளி யிட்ட கோட்ட பொறியாளர்களின் செய லுக்கு, துணைபோகும் தலைமை பொறி யாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.