சேலம், ஏப்.27- சிஐடியு அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் 33 ஆவது மாநில மாநாடு சேலம் மாவட்டம், மேட்டூரில் வியாழனன்று துவங்கி யது. சிஐடியு அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் 33 ஆவது மாநில மாநாடு சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் துவங்கியது. மாநில தலைவர் ஜி.செந்தில் தலைமையில் துவங்கிய மாநாட்டை சம்மேளன தலைவர் அ.சவுந்தர ராஜன் துவக்கி வைத்தார். பேர ணியை மாநில துணைத் தலைவர் எஸ்.நடராஜன் துவக்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் எட்மன்ட் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநில துணை பொதுச்செயலாளர் முருகேசன் வரவேற்புரையாற்றி னார். அஞ்சலி தீர்மானத்தை மாநில துணை பொதுச்செயலாளர் குமார் முன்மொழிந்தார். மாநில பொதுச் செயலாளர் எம்.கனகராஜ், மாநில பொருளாளர் எம்.ரவி ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசி னர். இம்மாநாட்டில் சிஐடியு சேலம் மாவட்ட செயலாளர் டி.உதய குமார், சாலை போக்குவரத்து சங் கத்தின் மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில பொருளாளர் சசிகுமார், சேலம் கோட்ட செயலாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, ஈரோடு பொதுச்செயலா ளர் ஜான் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, கோவை திருநீல கண்டன், லட்சுமணசாமி நினைவு திடலில் தியாகிகள் ஜோதி எடுத்து வரப்பட்டது. சேலம் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க கோட்ட தலைவர் கே.செம்பான் எடுத்து கொடுத்தார். அதனை விரைவு போக் குவரத்து ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.செல்லப்பன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இம்மாநாடு வெள்ளியன்றும் நடை பெறவுள்ளது.