தாராபுரம், டிச-2 தாராபுரம் கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு காலி குடங்களை வைத்து கும்மியடித்து தண்ணீர் கேட்டு ஒப்பாரி வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரத்தை அடுத்துள்ள கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட சலவையாளர் நகர் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகு றித்து பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார்செய்தும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க கோரி உடுமலை, தாராபுரம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலை கைவிட்டு பஞ்சாயத்து அலுவ லகத்திற்கு பெண்களை வரச் சொல்லி அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றபோது அலுவலகம் திறக்கப்படாததால் ஆத்தி ரமடைந்த பெண்கள் பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பு காலி குடங்களை வைத்து கும்மியடித்து தண்ணீர் கேட்டு ஒப் பாரி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அலுவ லக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும என உறுதியளித்தார்.இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டத்தால் தாராபுரம் உடுமலை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.