திருப்பூர், அக்.26- கோவை மாவட்டம் காடம்பாறையில் மின் வாரிய ஊழிய ராக பணியாற்றி ஓய்வு பெற்ற மார்க்சிய முன்னோடி, நாவலாசி ரியர் எழுத்தாளர் தி.குழந்தைவேலு எட்டு நாவல்கள் உள் ளிட்ட படைப்புகளை தந்துள்ளார். வயது முதிர்ந்து நலிவ டைந்த நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வரும் எழுத்தாளர் தி.குழந்தைவேலுவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பொருளாளர் ராமசாமி, சங்க மூத்த தோழர் தனபால் மற்றும் படைப்பாளி தாண்டவக் கோன் ஆகியோர் வெள்ளியன்று அவரது வீட்டில் நேரில் சந் தித்து நலம் விசாரித்தனர்.