சேலம், டிச.23- கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவ, மாண வியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது. சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன் பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏற்காடு அருகே உள்ள தலைச்சோலையை சேர்ந்த முரளிந்திரன் என்பவர், அறிவியல் ஆசிரிய ராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, பாடம் நடத்தாமல் வெளியில் சென்று விடுவதாகவும், அவருக்கு பதில் வேரொரு பெண்ணை பெற்றோர் - ஆசிரியர் கழகம் மற் றும் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் ஆசிரி யராக நியமித்து மாணவர்களுக்கு பாடங் களை நடத்த சொல்லி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், சம் பந்தப்பட்ட பள்ளியில் கடந்த டிச.6 ஆம் தேதி யன்று, திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது வகுப்பறையில் ஆசிரியர் முரளிந்திரன் பணி யில் இல்லாததும், அவருக்கு பதில் வேறு ஒரு பெண் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைய டுத்து ஆசிரியர் முரளிந்திரனை கடந்த டிச.12 ஆம் தேதியன்று பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார். இதனிடையே பெற்றோர் - ஆசிரியர் கழ கம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தான் ஆசிரி யர் முரளிந்திரன், புதிய கட்டுமான பணிகளில் ஈடுபட்டதாகவும், அதற்கு மாற்றாக பள்ளி யில் இல்லாத நேரங்களில் மாற்று ஆசிரியை கொண்டு பாடம் நடத்தப்பட்டுள்ளது என பெற் றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் விளக்கம் தரப்பட்டது. இருப்பினும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவியல் ஆசிரியர் முரளிந் திரனை தற்காலிக பணிநீக்கம் செய்ததை கண்டித்து பெற்றோர் - ஆசிரியர் கழகம் மற் றும் அப்பள்ளி மாணவர்கள் வெள்ளியன்று அஸ்தம்பட்டி - ஏற்காடு பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கண்ட ஆசிரியரை மீண் டும் இதேபள்ளியில் பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, பெற்றோர் - ஆசிரி யர் கழக தலைவர் கே.எம்.ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மேனகா ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத் தில், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற் றோர்கள், மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.