districts

img

ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க தற்காலிகத் தடை!

தருமபுரி, செப்.1- ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருவிகளில் குளிப்பதற்கும், பரி சல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஞாயிறன்று முதல் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர் நாடகத்தில் உள்ள கபிணி மற்றும்  கிருஷ்ணராஜ சாகர் அணைக ளுக்கு வரும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளதால், காவிரி ஆற் றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற் றில் கடந்த இரு தினங்களாக நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காவிரி ஆற் றுக்கு சனியன்று மாலை நிலவரப் படி விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி யாக இருந்த நீர்வரத்து, ஞாயிறன்று நிலவரப்படி விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் ஒகே னக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இந்நிலையில், ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற் கும், அருவிகளில் குளிப்பதற்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி ஞாயிறன்று முதல் தற்காலி கத் தடை விதித்துள்ளார். இதன் கார ணமாக பிரதான அருவி செல்லும் நடைப்பாதை பூட்டப்பட்டு, சின் னாறு பரிசல் துறையில் இருந்து பரி சல் இயக்கம் நிறுத்தப்பட்டது. இத னிடையே, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம், அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற னர். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து அளவுகளை தமிழக - கர்நா டக எல்லையான பிலிகுண்டுப் பகு தியில் மத்திய நீர்வளத்துறை அதி காரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தடையை மீறி படகு இயக்கம் இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால்  சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதி கரித்த நிலையில், பரிசல் ஓட்டிகள் சிலர் தடையை மீறி சுற்றுலாப் பய ணிகளை அழைத்துக் கொண்டு காவிரி ஆற்றில் பரிசல் பயணம்  மேற்கொண்டனர். பரிசல் பயணத் தின் போது பாதுகாப்பு உடையின்றி  அழைத்துச் செல்வதால் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக நிலை தடு மாறி நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட வாய்ப்புள்ள தாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரி விக்கின்றனர். எனவே, மாவட்ட நிர் வாகத்தின் தடையை மீறி ஒகே னக்கலில் பரிசல் இயக்கும் பரிசல் ஓட்டிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.