திருப்பூர், ஆக.12- அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று பெற்றோர்களுடன் பள்ளி முன்பு மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதன்மை கல்வி அலுவலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆசிரியர்கள் நிய மிப்பதற்கான உத்தரவாதம் பெறப்பட்டது. அனுப்பர்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரி யர்கள் எண்ணிக்கை இல்லை. எனவேதான், 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 160 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வில்லை. மேலும், பள்ளியில் இரவு காவலர் கள் இல்லாததால், சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே மாணவ, மாணவி யரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உட னடியாக ஆசிரியர்களை நியமிக்க கோரி கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 15.வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக் கப்பட்டது. இந்நிலையில் மனு அளித்து ஒரு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத தால், ஆகஸ்ட் 12 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பள்ளி முன்பு பெற் றோர்களுடன் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் எ.கிளை செயலாளர் வி.வெள்ளியங்கிரி தலைமை யில் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்த கோபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக் கிப் பேசினர். இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வேலம் பாளையம் காவல் ஆய்வாளர், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். இதில், உடனடியாக 3 பட்டதாரி ஆசிரியர்களும், 2 உடற்கல்வி ஆசி ரியர்களும் மாற்றுப்பணி மூலம் நியமனம் செய்து உத்தரவு நகலை அளித்தனர். மேலும் அலுவலக உதவியாளர் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்படும். இரவுக் காவலர் நியமனம் செய்ய அரசுக்குப் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. அதுவரை காவல் துறையின் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப் படும் என்றும் எழுத்துப் பூர்வமாக தெரி வித்தனர். இதையடுத்து போராட்டம் விலக் கிக் கொள்ளப்பட்டது. இதில், நகரக் குழு உறுப்பினர்கள் அ. ஆறுமுகம், பி.சின்னச்சாமி, த.நாகராஜன், ர. கவிதா, ஆர்.சுகுமார், அ.உமாநாத் மற்றும் கிளைச் செயலாளர்கள் வி.ஆர்.சரவணகு மார், த.சிவகுமார், செந்தில், ப.செல்வி, செல் வகுமார், ஏ.முத்துக்குமார், ராம்கி உள்ளிட் டோருடன், பெற்றோர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.