திருப்பூர், செப். 5 - இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாயன்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமையேற்றார். நிகழ்ச்சியில் தொடக்கமாக கணித ஆசிரி யர் ஆழ்வார் வரவேற்றார். இவ்விழாவிற்கு இடுவாய் பள்ளி யின் முன்னாள் மாணவரும் முன்னாள் கல்விக்குழுத் தலைவ ருமாகிய விநாயகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் களாக முன்னாள் இடுவாய் பள்ளியின் மாணவரும் ஆசிரியரு மான நாச்சிமுத்து, மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் தினத்தின் மேன்மையையும், ஆசிரியர்களின் பெரு மையையும் அவர்கள் எடுத்துரைத்தனர். மாணவர்கள் அக்ஷயா மற்றும் பிரனேஷ் ஆகியோர் ஆசிரியர் தினம் பற்றி எடுத்துரைத்தனர். சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர் களுக்கும் இனிப்பு வழங்கிப்பட்டது. நிறைவாக தமிழாசிரி யர் மா.ரமேஷ் குமார் நன்றி கூறினார்.