உதகை, அக்.14- டாஸ்மாக் குடோனில் பணி யாற்றும் சுமைப் பணி தொழிலாளர் களுக்கு சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தி னர் மாநிலம் முழுவதும் திங்க ளன்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழகத்தில் 43 டாஸ்மாக் குடோன்கள் உள்ளன. இந்த குடோ னில் 2500க்கும் மேற்பட்ட சுமைப் பணி தொழிலாளர்கள் பல ஆண்டுக ளாக பணிபுரிந்து வருகிறார்கள். டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர்கள் தீபாவளிக்கு ரூ.500, ரூ.1000 என சுமைப்பணி தொழிலாளர்களுக்கு போனஸ் என்ற பெயரில் மிக சொற்பமான தொகையை வழங்கி வருகின்றனர். எனவே, டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி யான போனசை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்டிச்சோலையில் உள்ள டாஸ் மாக் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இச்சங் கத்தின் தலைவர் ரங்கசாமி தலைமை ஏற்றார். சிஐடியு மாவட் டச் செயலாளர் சி.வினோத், சிஐடியு மாவட்ட நிர்வாகி ஆல்துரை, சிஐ டியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன், மாவட்ட நிர்வாகி பி. மகேஷ், மாவட்டக் குழு உறுப் பினர் இளங்கோவன் மற்றும் விஜி உள்ளிட்ட திரளனோர் பங்கேற்ற னர். முடிவில், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். கோவை பொள்ளாச்சி டாஸ்மாக் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி சங்கத்தின் மாவட்டத்தலைவர் என்.மாயவன் தலைமையேற்றார். கோரிக்கை கள் குறித்து செயலாளர் ஏ.திரு மலை ராஜாராம் உரையாற்றினார். இதில், திரளான டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் கள் பங்கேற்றனர். முடிவில் எம்.விஜயகுமார் நன்றி கூறினார்.