districts

img

ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கு அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம், ஜூலை 27- பணம் பறிக்கும் நோக்கத்துடன் மேட்டுப் பாளையத்தில் டாஸ்மாக் மேற்பார்வையா ளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம் பவத்தில் தொடர்புடைய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ் மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங் கத்தினர் மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் கடந்த 25 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடை யில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் விஜய் ஆனந்த் என்பவர் வங்கியில் பணம் செலுத்த 15 லட்சம் ரூபாயுடன் தனது இரு சக் கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்னால் தொடர்ந்து வந்த இரு நபர்கள் விஜய் ஆனந்தை தாக்கி கத்தியால் குத்தி பணத்தை பறிக்க முயன்ற னர். ஆனால், அருகிலிருந்த மக்கள் ஒன்று  கூடியதால் அந்த நபர்கள் தப்பியோடினர். இதனால் பணம் தப்பியது. மக்கள் நடமாட் டம் அதிகமுள்ள சாலையில் நடைபெற்ற தாக் குதல் மற்றும் கொள்ளை முயற்சி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இத்துணிகர சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் ஆனந்த் தாக்கப் பட்ட சம்பவத்தை கண்டித்தும், டாஸ்மாக் ஊழியர்களை குறி வைத்து தாக்கி பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை  மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து  நிலை யம் அருகே டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், சிஐடியு டாஸ்மாக் தொழிற் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் அந் தோனிராஜ், பாட்டாளி தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் எம்.ராமசுந்தரம், அரசு பணியாளர் சங்க ராமானுஜம், ஏஐசிசிடியு மதி யழகன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இதில், நூற்றுக்கும் மேற் பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கமிட்டனர். மேலும், டாஸ்மாக் ஊழியர்களின் உயி ருக்கும், உடைமைக்கும் சட்ட பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். வங்கிகளே டாஸ் மாக் கடைகளுக்கு நேரடியாக சென்று விற் பனை பணத்தை பெற வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக, மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள ஊழியரை நேரில் சந்தித்த சிஐடியு உள்ளிட்ட சங்க தலைவர்கள் ஆறு தல் கூறினர்.