districts

img

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை, நவ.29- கூலி உயர்வு கேட்டு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் கள், புதனன்று வேலை நிறுத்த  போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதனால், கோவை மாவட்டத்தில் புதனன்று ஒரு நாள் மட்டும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் வந்த சரக்கு கள் இறக்கப்படாமல் தேக்கம டைந்துள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மது பான  குடோன்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, இறக்கு  கூலியை உயர்த்தி  தர வேண்டும் என பல கட்ட போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தி வருகின் றனர். பீர் பாட்டில் பெட்டிக்கு ரூ5.50 பைசாவில்  இருந்து 9 ரூபாய் ஆக வும், மதுபாட்டில்கள் பெட்டிக்கு ரூ4  லிருந்து  ரூ.8 ஆக கூலி உயர்வு ஒரு  பெட்டிக்கு வழங்க வேண்டும் என் கிற கோரிக்கை முன்வைத்தனர். இக்கோரிக்கைகளை தமிழகஅரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம், உற் பத்தி நிறுவனங்களுடன் பேசி கூலி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இல்லையென் றால், 29ஆம் தேதி வேலை  நிறுத்த  போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரி வித்திருந்தனர். இருப்பினும், மது பான உற்பத்தி நிறுவனங்கள் சுமைப் பணி தொழிலாளர்களின் கோரிக் கைகளை இதுவரை செவிசாய்க்க வில்லை. இதனையடுத்து, புதனன்று முதல் வேலை நிறுத்த போராட் டத்தை டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்கள் முன்னெ டுத்துள்ளனர். இந்த வேலை நிறுத் தம் காரணமாக கோவை மாவட்டத் தில், மதுபான உற்பத்தி நிறுவனங் களில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுபான பாட்டில்கள் 50  லாரிகள்  குடோன் முன்பு நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.   இதுகுறித்து, சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தின் செயலாளர் பீர்முகம்மது கூறு கையில், கோவை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு இரண்டு மாவட்டத் திற்குமான குடோனாக பீளமேடு டாஸ்மாக் குடோன் செயல்படுகி றது. இங்கு சுமைப்பணி தொழி லாளர்கள் நூறுக்கும் மேற்பட்டோர்  பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன் றிற்கு குறைந்தபட்சம் 30 லாரிகளில் வரும் சரக்குகளை இறக்குகி றோம். இதேபோன்று டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்வ தற்காக, நாள் ஒன்றிற்கு சுமார் 15 ஆயிரம் பெட்டிகளை ஏற்றி விடுகி றோம். டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்களின் நியாய மான கோரிக்கைகள் குறித்து, மது விலக்கு ஆய் தீர்வை அமைச்சரிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஆனாலும், மதுபான உரிமையாளர்கள் இது பற்றி பேச மறுத்து வருகின்றனர்.

இன்றுள்ள  விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, குழந்தைகளின் கல்விச் செலவு அணைத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனாலும், சுமைப் பணி தொழிலாளர்களின் கூலியை பொருத்தவரை அத்தக்கூலிகளைப் போன்றே நடத்தப்படுகிறோம். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மதுபான உற்பத்தி நிறுவனங்கள், குறைந்த பட்சமாக நாங்கள் கேட்கும் கூலி யைக்கூட தருவதற்கு தயாரில்லை என்கிற நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி யுள்ளோம். எங்களுடைய இந்த வேலை  நிறுத்த போராட்டத்தின் காரணமாக, தற்போது குடோனில் உள்ள மது வகைகள் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு சப்ளையாகும். பின் னர், சரக்குகள் கையிருப்பு தீர்ந் தால், டாஸ்மாக் மதுபான கடைக ளில், மதுவகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனால், அரசுக்கு வரு வாய் இழப்பு ஏற்படும். அதுபோல, தற்போது மதுபானை உற்பத்தி நிறு வனங்கள் லாரிகளில் அனுப்பி வைக்கும் சரக்குகள் இங்கு குடோன் முன்பு நிறுத்தப்படுவதால், லாரிக ளுக்கான வாடகை அதிகம் கொடுக்க வேண்டியது வரும். இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு, நாங்கள் கேட்கிற குறைந்தபட்ச கூலியை உடனடியாக தர வேண் டும். இல்லை என்றால் எங்களின்  போராட்டம் வலுவாக தொடர் வோம், என்றார்.