districts

ஈரோட்டில் தமுஎகச கலை இலக்கிய விருதளிப்பு விழா

ஈரோடு, டிச. 18- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக் கிய விருதளிப்பு விழா ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனி யன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் பல வருடங் களாக நல்ல இலக்கியங்களை, கலை களை, குறும்படங்களை, ஆவணப் படங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில அளவில் சிறந்தவற்றைத் தேர்த் தெடுத்து விருதுகள் வழங்கி வருகி றது. அந்த வகையில் முற்போக்கு கலை  இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு  செய்த ஆளுமைக்கான கு.சின்னப்பபா ரதி அறக்கட்டளை விருது, தோழர் கே. முத்தையா நினைவு விருது, கே.பி. பாலசந்நர் நினைவு விருது, சு.சமுத்தி ரம் நினைவு விருது, இரா.நாகசுந்தரம் நினைவு விருது, வெம்பாக்கம் ஏ. பச்சையப்பன்-செல்லம்மாள், அகிலா சேதுராமன் நினைவு வருது, வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மக் கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது மற்றும் மேலாண்மை பொன்னு சாமி விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்படுகின்றன.  விழாவில் எழுத்தாளர்கள் சு.வெங்க டேசன் எம்பி, மதுக்கூர் ராமலிங்கம்,  ஆதவன் தீட்சண்யா, ச.தமிழ்ச்செல் வன், திரைக்கலைஞர் ரோகிணி, எழுத் தாளர்  நாடகவியலாளர் பிரளயன், எழுத் தாளர் அ.லட்சுமிகாந்தன் மற்றும்  அ.கரீம் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்ற னர். இசை, நாடகம், கலை நிகழ்ச்சிக ளும் விழாவில் இடம் பெறுகின்றன.