districts

img

தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை

கரூர், மே 11-தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில்தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.கரூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம்தேதி நடைபெற உள்ளது.இதனிடையே கூடுதலாக 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும்என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தல் ஆணையம் இந்த இடைத்தேர்தலில் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத் தேர்தலை 18 தொகுதிகளோடு சேர்த்து நடத்தியிருக்கலாம். திமுக உச்சநீதிமன்றத்திற்குச் சென்றதால் தான் இந்த 4 தொகுதிக்கும் தேர்தல்நடக்கிறது. இருதினங்களுக்கு முன்பு தலைமைத் தேர்தல் அதிகாரி 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளது. எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்களை அழைத்து அவர்தான் கூறினார். ஆனால் அன்று இரவு 11 மணிக்கு மேலே இந்திய தேர்தல் ஆணையம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு என அறிவிக்கிறது. அப்படியானால் 46 வாக்குச்சாவடிகளில் நடந்ததவறு என்னாச்சு? உடனே சரி செய்து விட் டார்களா என்ற கேள்வி தான் எழுகிறது. இப்போது என்ன சொல்கிறார்கள். 46 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு தான் எண்ணுவோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ண மாட்டோம் என்கிறார்கள். எனவே இப்படி தேர்தல் ஆணையமே முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள் வது சந்தேகத்தை எழுப்புகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை தேர்தல் ஆணையம் என்ன செய்யும் என்று நிச்சயமாக இல்லாத சூழ்நிலை தான் நிலவுகிறது. தேர்தல் ஆணையம் பற்றி நாங்கள் புகார் சொன்னால் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்கி, அவர்கள் செய்வது சரி என்கிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு, உத்தரவுக்கு பணிந்து தான் இதுபோன்ற குழப் பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தான் நாங்கள் சொல்கிறோம். தலைமை தேர்தல்ஆணையரை மாற்ற வேண்டும். அல்லது சிறப்பு பார்வையாளரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும்.

மத்தியில் உள்ள மோடி அரசும், தமிழகஅரசும் பதற்றத்துடன் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கு. 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தாலும், அதில் திமுக அதிகஇடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்பதால் எப்படியாவது ஆட்சியைகாப்பாற்ற வேண்டும் என 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி தயாராக இருக்கிறது. தேர்தல் முடிவு அதிமுக, பாஜகவுக்கு எதிராகத்தான் இருக்கும்.23ம்தேதி பிறகு இடைத்தேர்தல் வெற்றியானது, இடைத்தேர்தல் வெற்றி மட்டும் இருக்காது. ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலுவதாக இருக்கும். மதுரை திருமங்கலத்தில் இரு ரயில்கள்நேருக்கு நேர் மோதக்கூடிய நிலை ஏற்பட்டதற்கு காரணமாக ரயில்வேயில் வடமாநில அதிகாரிகள் பேசுவது இங்குள்ள ஊழியர்களுக்கு புரியவில்லை என்கிறார்கள். ரயில்வேயில் அதிகளவில் வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோர் வேலையின்றி இருக்கும்போது வடமாநில இளைஞர்களை இங்கு பணியில் அமர்த்துவது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.விருத்தாசலத்தில் வீட்டில் இருந்த திலகவதி என்ற பெண் கொலை செய்யபட்டிருக்கிறார். பெண்களை கொடூரமாக கொலை செய்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. திலகவதி கொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். 

பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு 6 பாடத்தில் இருந்து 5 பாடமாக குறைத்து, மொழிப்பாடத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையென்றால் அதிக மாணவர்கள் தமிழை புறக்கணிக்கும் நிலை ஏற்படும். ஆனால் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அப்படி வராது என தெரிவித்துள்ளார். அது நம்பிக்கை அளித்தாலும் கூட, எந்தசூழ்நிலையிலும் மொழி பாடத்தில் தமிழ்படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் கைவிடும்வகையில் தமிழக அரசு செயல்படுத்தக் கூடாது. அரவக்குறிச்சி தொகுதியில் அதிகமான தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வருகிறார் கள். அவர்களது பிரசாரத்திற்கு தடைவிதிப்பது நியாயமல்ல. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.