பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தாலுகா தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், மாவட்ட பொறுப்பாளர் ஏ.ரங்கசாமி, தாலுகா நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.