திருப்பூர், ஜூலை 9- வடமாநிலங்களில் முஸ்லிம்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதல் களை கண்டித்தும், சிஆர்பிசி, ஐபிசி எவிடன்ஸ் ஆகிய திருத்தப்பட்ட சட் டங்களை அமல்படுத்துவதை கண் டித்தும், தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு சார்பில் செவ்வாயன்று திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சத்தீஸ்கர் மாவட்டம் ராய்ப்பூரில் எருமை மாடுகளை வளர்ப்புக்காக வாங்கி வந்த மூன்று முஸ்லிம் இளை ஞர்களை அடித்து படுகொலை செய் யப்பட்டுள்ளனர். அலிகாரில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் மண்டலாயில் குளிர்சாதனப் பெட்டியில் மாட்டுக்கறி இருந்ததாக கூறி 11 வீடுகளை புல்டோசர் வைத்து இடித்துள்ளனர். லக்னோ அக்பர் நக ரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்க ளின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டுள் ளன. இமாச்சல் பிரதேசம் நாகன் பகு தியில் முஸ்லிம்களின் கடைகள் இடித்து தரைமட்டமாக்க பட்டுள் ளன. தலைநகர் டெல்லியில் சங்கம் விகார் என்ற பகுதியில் இறைச்சிக் காக மாடு வெட்டப்பட்டதாக கூறி தாக் குதலை துவங்கியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்கக் கூடாது என இந்துத்துவ சக்திகள் அதிகாரிகளுக்கு நெருக் கடி கொடுத்து வீடு வழங்க மறுக்கி றார்கள். இப்படி தொடர்ந்து முஸ்லிம் கள் மீது தொடர் தாக்குதல் நடை பெற்று வருகிறது. இதை கண்டித் தும், திருப்பூர் பங்களா ஸ்டாப் எதிரில் உள்ள ஏஜி சர்ச்சை மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறந்து விட வலியுறுத்தி யும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் எ.முக மது ஜாபர் தலைமையில் திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலக்குழு உறுப் பினர் மினி, மாவட்ட துணைச் செய லாளர் எ.இப்ராஹிம்சா, தெற்கு பகுதி நிர்வாகி டி.ஜெயபால், அகில இந்திய வழக்கறிஞர் சங்க தேசியக்குழு உறுப் பினர் எஸ்.பொன்ராம், ஏஜி சர்ச் அன்ப ரசு, ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வை. ஆனந்தன் நிறைவுறையாற்றினார்.