districts

img

ஹட்சன் தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருக

தருமபுரி, ஜன.3- ஹட்சன் தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி முத்து இல்லத்தில் மாவட்ட தலைவர் எஸ்.தீர்த்தகிரி தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில பொதுச்செய லாளர் கே.முகமது அலி, மாவட்ட செயலாளர் ஆர்.சின்னசாமி, மாவட்ட பொருளாளர் ஆர்.வள்ளியம்மாள், தமிழ்நாடு  விவ சாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் சோ.அருச்சுணன், மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.42ம், எருமைப்பால் லிட்டர் ஒன் றுக்கு  ரூ.52 என கொள்முதல் விலை வழங்க வேண்டும். கால் நடை தீவனம் 50 சதவிகித மானிய  விலையில் வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகமும், மாவட்ட ஒன் றியமும் பால் உற்பத்தியாளர் களுக்கு வழங்க வேண்டிய பால் பாக்கி தொகையை  பொங்கல்  பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும். ஆவினுக்கு வருகின்ற பாலை திருப்பி அனுப்பாமல் வாங்கி கொள்ள வேண்டும். தரும புரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5  லட்சம் லிட்டர் பாலை கொள்மு தல் செய்ய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். அதற்கான உட்கட்டுமான ஏற் பாட்டை செய்ய வேண்டும். ஹட் சன் பால் நிறுவனத்தில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக போரா டிவரும் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண் டுவர மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதையடுத்து, பால் உற்பத்தி யாளர்கள் சங்க தருமபுரி மாவட்ட தலைவராக கே.அன்பு, மாவட்ட செயலாளராக எஸ்.தீர்த்தகிரி, மாவட்ட பொருளாளராக ஆர்.வள்ளியம்மாள், துணைத் தலை வர்களாக சி.சிங்காரம், ஆர்.சின்ன சாமி, மாவட்ட துணைச் செயலாள ராக மனோகரன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.