districts

img

பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற ஆன்லைன் முறையை ரத்து செய்திடுக

சேலம், பிப்.1- பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற ஆன்லைனில் தான் விண்ணப் பிக்க வேண்டும் என்ற முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக  அரசுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட் டம் சேலம் மாவட்டத்தில் செவ்வா யன்று சங்கத்தின் மாநில தலைவ ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான பி.டில்லிபாபு தலைமை யில் நடைபெற்றது. இதில் பழங்குடி யினர் சாதி சான்றிதழ் பெற ஆன்லை னில் தான் விண்ணப்பிக்க வேண்டும்  என்ற முறையை ரத்து செய்ய வேண் டும். பழங்குடி இனத்தை சார்ந்த ஒட்டுமொத்த கொண்டாரெட்டி பழங்குடி மக்கள் மீது மூன்றாம் நபர்களால் அளிக்கப்படும் புகார்க ளின் பேரில் விசாரணைக்கு உத்தர விட்டது சட்டத்திற்கு புறம்பானது. எனவே உத்தரவிட்ட விசார ணையை திரும்ப பெறவேண்டும். ஒன்றிய அரசின் நிதி நிலை  அறிக்கையில் பழங்குடி மக்களுக் கென்று எவ்வித அறிவிப்புகளும் இடம் பெறாதது ஒட்டுமொத்த பழங் குடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதை கண்டித்து பிப்ர வரி 15ஆம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த கூட்டத்தில் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்க மாநில பொது செயலாளர் இரா.சரவணன்,  மாநில பொருளாளர் எ.பொன்னு சாமி உள்ளிட்டு பலர் பங்கேற்ற னர்.