districts

img

மலைகளின் மீது தனியார்கள் நிலம் வாங்குவதற்கு தடை

ஈரோடு, ஜூலை 13-  மலைவாழ் மக்களுக்கு பழங் குடி சாதிச்சான்று வழங்க வேண் டும். மலைகளில் பழங்குடியின மக் களை தவிர தனியார்கள் நிலம் வாங்குவதை தடை செய்ய வேண் டும் என தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சத்தி வட்டார 9 ஆவது மாநாடு பசுவனாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. வட்டார தலைவர் பி.சடையப்பன் தலை மையில் நடைபெற்ற மாநாட்டில் மூத்த தலைவர் என்.சடையப்பன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். துணைச்செயலாளர் எம்.சடைய லிங்கம் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில  பொதுச்செயலாளர் பெ.சண்முகம் மாநாட்டை துவக்கிவைத்து உரை யாற்றினார். மலைவாழ் மக்கள்  சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் இரா.சரவணன் சிறப்புரை யாற்றினர். இதில், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மூத்த தலைவர்கள் கே.ஆர்.திருத்தணிகாசலம், சி. துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மலைவாழ் மக்களுக்கு பழங் குடியின சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும். 2006 வன உரிமை சட் டத்தை அமலாக்க வேண்டும். மலைப்பகுதி சாலைகளை அகலப் படுத்த வேண்டும். மலையின் மீது வசித்து வரும் மக்களுக்கு தடை யில்லா மின்சாரம் வழங்க வேண் டும். மலைவாழ் மக்களை தவிர மற் றவர்கள் மலை மீது நிலம் வாங்கு வதை தடை செய்ய வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  இதைத்தொடர்ந்து சங்கத்தின் வட்டார தலைவராக பி.தங்கவேல், செயலாளர் எம்.சடையலிங்கம், பொருளாளராக பி.சடையப்பன் உட்பட 21 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

பர்கூர் வட்டார மாநாடு

இதேபோன்று தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க பர்கூர் மலை வட்டார 5 ஆவது மாநாடு பர்கூர்  மலை முள்ளிக்காடு மாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. வட்டார தலைவர் எஸ்.வி.மாரி முத்து தலைமையில் நடைபெற்ற  மாநாட்டில் சங்க கொடியை மூத்த  தலைவர் ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.சடையப்பன் உரை யாற்றினார். மாநாட்டை வாழ்த்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட தலைவர் எஸ்.முத்துசாமி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர். முருகேசன் ஆகியோர் உரையாற்றி னர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் வட்டார தலைவராக எஸ்.விஜயன், துணைத்தலைவராக கே.முருகன், செயலாளராக எஸ்.வி.மாரிமுத்து, துணைச்செயலாளராக எஸ்.தங்க ராசு, பொருளாளராக எஸ்.மாதேஸ்  உட்பட 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவ ணன் உரையாற்றினார். இறுதியாக கே.முருகன் நன்றி கூறினார்.