உடுமலை ஜூன் 22- அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப் பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கதினர் தமிழகம் முழு வதும் வாகன பிரச்சாரம் நடை பெற்றது. புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், வனப்பாதுகாவ லர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு காலமும் ஊதியம் வழங்க வேண் டும். ஊராட்சி, பேரூராட்சி, மாநக ராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியைத் தமிழக அரசு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப் பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பு காலம் குறிப்பிடாமல் தடை செய் ததை உடன் திரும்ப வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணி வரன்முறை செய்திட வேண் டும். தமிழக அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும். கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவ ருக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் வாகன பிரச்சாரம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட் டக்கிளைத் தலைவர் வெங்கிடுசாமி தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன் மாநி லத்துணைத் தலைவர்கள் கோ. பழ னியம்மாள் சி.கிரிஸ்டோபர், மாவட் டச் செயலாளர் பாலசுப்பிரமணி யன், மடத்துக்குளம் செயலாளர் முருகசாமி, மாவட்ட துணை செய லாளர்கள் அன்வருல்ஹக், வைர முத்து மற்றும் உடுமலை நிர்வாகி கள் வசந்தி, ஜெகதீசன், மதன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, வேன் பிரச்சார இயக்கம் உடுமலையில் வேளாண் துறை அலுவலகத்தில் தொடங்கப் பட்டு, ஊரக உள்ளாட்சி துறை அலுவ லகம் நெடுஞ்சாலைத்துறை அலுவ லகம் நகராட்சி அலுவலகம் மற்றும் நிறைவாக வட்டாச்சியர் அலுவல கம் முன்பாக நிறைவுற்றது.