சேலம், அக்.17- ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பணப்பலன்களை பெறுவதில் சிக் கலை ஏற்படுத்தும் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத் தின் மூலமாக முழுத்தொகையை யும் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட கரூவூல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் ந.திருவேரங்கன் தலைமை வகித் தார். இதில், மாவட்டச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல்வம், நிர் வாகிகள் சிங்கராயன், திருநாவுக் கரசு, முருகபெருமாள், ரமேஷ் உட் பட பலர் பங்கேற்றனர். ஈரோடு இதேபோன்று ஈரோடு மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழி யர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.சுமதி தலைமை வகித்தார். இதில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மு.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன், இணைச்செயலாளர் சரவணமணி உட் பட பலர் கலந்து கொண்டனர்.