districts

பயிரிட்ட ஒரே மாதத்தில் அழுகும் நெல் பயிர்கள்: ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், நவ.29- மடத்துக்குளம் முதல் தாராபுரம் வரை 3000க்கும் மேற்பட்ட ஏக்கர்  விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் ஒரே மாதத்தில் அழுகி விடுகிறது. இதுகுறித்து  வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்  வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை வைத்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வெள்ளியன்று மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை யில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியதா வது, மடத்துக்குளம் தாராபுரம் பகுதி யில் 3000 க்கும் மேற்பட்ட ஏக்கர்  விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் ஒரே மாதத்தில் அழுகி விடுகிறது. இது நோய் தக்குதலா அல்லது பூச்சு மருந்து அடித்ததன் பாதிப்பா என தெரியவில்லை. இத னால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை  இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் மைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக் குளம் பகுதியில் உள்ள 3 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களும் பூட் டியே உள்ளன. இதனால் விவசாயி கள் வெளியில் வைத்து  விளை பொருட்களை விற்பனை செய்கின்ற னர். விவசாயிகள் ஒழுங்குமுறை விற் பனை கூடத்திற்குள் விற்பனை செய் யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி, மிளகாய் ஏக்க ருக்கு 10 டன் விளைச்சல் கிடைக்கும்  என பன்னாட்டு தனியார் நிறுவனங் கள் விதைகளை விற்பனை செய்கி றார்கள். ஆனால் ஏக்கருக்கு 3 டன்  முதல் 4 டன் மட்டுமே கிடைக்கிறது.  இதையும் ஆய்வு செய்ய வேண்டும்.  அதேபோல திருமூர்த்தி மலை முதல்  குறுமலை வரை சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் வாகனங்களை பயன்ப டுத்த பர்வேஸ் போர்டலில் விண்ணப் பிக்க வனத்துறையினர் கட்டாயப் படுத்துகின்றனர் என்றார்.      கரும்பு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் எ.பாலதண்டபாணி, கூறுகையில், அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத் தும், இன்னும் போதுமான நிதி ஒதுக் கப்படவில்லை. எத்தனை ஏக்கர் பயிர்  செய்தாலும் ஒப்பந்தம் போடவில்லை என்றால், ரூ.1.60 லட்சம் வரை தான் கடன் வழங்கப்படுகிறது. ஒப்பந்தம் செய்தால் ரூ.3 லட்சம் வரை கடன் பெற  முடியும். எனவே முறையாக ஒப்பந் தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம் பயிரப் பட்டுள்ளது. இப்பகுதிகளில் காட்டு  பன்றிகள் தாக்குதல்கள் அதிகரித்து  வருகிறது. இதுகுறித்து வனத்துறை  கூட்டங்களில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. காட்டு பன்றிகளின் தாக் குதல்களுக்கு உள்ளாகும் விளை நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுதில்லை. விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். குரல் குட்டை பகுதியில் பெரிய அளவில் நீர்  வழி பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கால்நடை மருத்துவம னைகளில் மருந்து இருப்பை உறுதி  செய்ய வேண்டும். அதேபோல் காலை மற்றும் மாலையிலும் மருத்து வர்கள் இருக்க வேண்டும். விவசாயி களுக்கு தமிழக அரசின் இலவச மின்  திட்டம் குறித்து முறையாக தகவல் அளிக்க வேண்டும், என்றார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச்செயலாளர் செல் வம் பேசுகையில், டாப்சிலிப் மலை  வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி யில் உள்ள 24 வீடுகளுக்கு மின்  இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கப்ப டிருந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வன துறை கண் காணிப்பு டவருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு எதிராக வனத்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். மேலும் மலை கிராமங்களில் சாலை  வசதியின்றி தவிக்கும் மலைவாழ் மக் களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர  வேண்டும் என பேசினார். இதை தொடர்ந்து விவசாயிகள் சிலர் பேசுகையில், தாராபுரம் பகுதி யில் இரு இடங்களில் டிச.3 ஆம் தேதி  கல்குவாரி அமைப்பது தொடர்பாக  கருத்து கேட்பு கூட்டம் நடத்துவ தாக சுற்றறிக்கை வந்துள்ளது. ஒரு கருத்து கேட்பு கூட்டத்தை வேறு தேதி யில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தாராபுரம் பகுதியில் உள்ள கால்நடை மருத்து வமனை வளாகத்தில் செல்ல முடி யாத அளவிற்கு நீர் தேங்கி நிற்கி றது. அதை சரி செய்ய வேண்டும்.  அதேபோல் கூட்டுறவு சொசைட்டி யில் யூரியா கிடைப்பதில்லை. உற் பத்தி செலவை கணக்கில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.