districts

img

விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல், ஜூன் 26- மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித் துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மும் முனை மின்சார இணைப்பு வழங்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்செங் கோடு ஒன்றிய முதல் மாநாடு ராமாபுரத்தில் ஒன்றிய தலைவர் எல்.பி.மனோகரன் தலை மையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை ஒன்றியக்குழு உறுப்பினர் எம். செங்கோடன் ஏற்றி வைத்தார். மாநாட்டை  துவக்கி வைத்து மாவட்ட துணைச்செயலா ளர் ஆர்.வேலாயுதம் உரையாற்றினார். மாநாட்டு வேலையறிக்யை ஒன்றிய செய லாளர் கே.செல்வம் முன்வைத்தார். இதில், மாவட்ட தலைவர் ஏ.ஆதிநாராயணன், மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி, மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வீ.தேவ ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், காவிரி - திருமணிமுத் தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசா யிகளுக்கு உடன் மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட அனைத்து வழித்தடங்களிலும் பேருந் துகளை இயங்கி பொதுமக்களின் சிர மத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றிய தலைவராக எல்.பி.மனோகரன், துணைத்தலை வராக கே.பூபதி, ஒன்றிய செயலாளராக கே.செல்வம், துணைச்செயலாளர் எம்.செங் கோடன், பொருளாளராக எம்.கிருஷ்ணன் உட்பட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.