பொள்ளாச்சி, ஏப்.15- பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யில் ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள அதிநவீன கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கை வசதிகள் கொண்ட பிரிவை காணொளி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று திறந்து வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை சார்பில் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் ரூபாய் 3 கோடியே 21 லட்சம் மதிப் பீட்டில் குழந்தைகள் மற்றும் பொது மருத் துவத்திற்கு அதிநவீன கருவிகளுடன் கூடிய படுக்கைகள் கொண்ட பிரிவு கட் டப்பட்டது. இதனை வியாழனன்று காணொளி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைத்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், நக ராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ் ணன், பொள்ளாச்சி அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொ டர்ந்து டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட தமிழக அரசு அறிவித்ததையடுத்து செவிலியர் கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக் கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.