districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குழந்தை தொழிலாளி மீட்பு

ஈரோடு, ஜன. 20- ஈரோட்டில் வணிக நிறுவனத்தில் பணியாற்றி  வந்த குழந்தை தொழிலாளி மீட்கப்பட்டு, பணிக்கு அமர்த்தி யவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர், ஆர்கேவி சாலையில் அராபா ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. இதில் 14 வயது சிறுமி பணிக்கு  அமர்த்தப்பட்டிருந்தார். இத்தகவலையடுத்து, தொழிலாளர்  உதவி ஆணையர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம்  தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கண்டறியப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 14 வயதிற்குட்பட்ட குழந்தை கள், 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களை பணிக்கு அமர்த்து வது, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் படி குற்ற மாகும். இவ்வாறு கண்டறியப்பட்டால் உரிமையாளர் மீது  ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது  6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க  நேரிடும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த புகாருக்கு 1098 அழைக்கலாம்.

தனியார் தொழிற்சாலையின் ஆக்கிரமிப்பு அகற்றம்

நாமக்கல், ஜன.20- ராசிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை ஆக்கிரமித்து  வைத்திருந்த புறம்போக்கு நிலங்களை அரசு அதிகாரிகள் மீட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாமகிரிப் பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார்  குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கழிவுநீர் வெளியேற்றத்தால் மங்களபுரம் மற்றும் தொழிற்சாலையை சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. இதனால், பலவிதமான நோய்களால் அப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்  என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தபட்ட அரசு  அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர். மேலும், இக்கோ ரிக்கையை முன்வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை யும் நடத்தி வந்தனர். இதனிடையே, இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோவில் மற்றும் புறம்போக்கு நிலங்களையும், நீர்நிலை களையும் ஆக்கிரமித்து இருப்பதாகவும் பொதுமக்கள் புகார்  அளித்தனர். அதன்பேரில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆக்கி ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து வியாழ னன்று காவல் துறையினர் பாதுகாப்புடன், வருவாய் துறை யினர் தனியார் தொழிற்சாலை ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு  புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களை மீட்டு, கழிவுநீர்  குழாய்களையும், கட்டப்பட்ட கட்டிடங்களையும் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் சிறுவன் பலி

உதகை, ஜன.20- கோத்தகிரி அருகே உள்ள ராம்சன்ட் பகுதியை  சேர்ந்தவர் நசீர் மகன் ரியாஸ்  (17). இவர் தனது நண்பரான மேத்யூ-வுடன் இருசக்கர வாகனத்தில், கண்ணேரி மூக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர்களது வாகனம், சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது  மோதியது. இவ்விபத்தில்  ரியாஸ் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேத்யூவை (27) கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மக்கள் மனு

பள்ளிபாளையம், ஜன.20- பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில், அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில், செயலாளர் மலர்விழியிடம், சமய சங்கிலி, அக்ரஹாரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள்  மனு அளித்தனர். அம்மனுவில், நாங்கள் சமயசங்கிலி அக்ர ஹாரம் பஞ்சாயத்து பகுதியில் வசிக்கிறோம். சுமார் 70க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் கே.எஸ்.நகர் பகுதியில் அமைந் துள்ளது. எங்கள் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர எரிவ தில்லை. இதன் காரணமாக விஷ ஜந்துக்களின் நடமாட்டம்  அதிகரித்துள்ளதால், குழந்தைகள் மற்றும் பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும், எங்கள்  பகுதியில் நீண்ட நாட்களாகவே குடிநீர் சரிவர வருவ தில்லை. குப்பைகள் கொட்டுவதற்கு போதிய இடம் இல்லாத தால், தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம் குப்பைகளை சேகரிப்பதற்கு தூய்மை பணியாளர்களும் சரிவர வருவதில்லை. இதன் காரணமாக எங்கள் பகுதியில்  குப்பைகள் அதிகரித்து, சுகாதார தொற்று பாதிப்பு ஏற்படும்  அபாயம் நிலவுகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுத்து, எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து சமயசங்கிலி அக்ரஹாரம் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டபோது, பள்ளிபாளையம் - திருச்செங் கோடு சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவ தால், மேம்பால பணிகளுக்காக, அவ்வப்போது பள்ளம்  தோண்டப்படுகிறது. இதனால் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது சரி செய்து குடிநீர்  வழங்கி வருகிறோம். மின்விளக்கு கம்பம் உடனடியாக சரி செய்து கொடுக்கப்படும். மேலும், குப்பைகள் கொட்டுவதற்கு போதிய இடம்  இல்லாததால், குப்பைகள் தேக்கப்படுகின்றன. இதுகுறித்து  பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கவ னத்திற்கு கொண்டு சென்று உரிய முறையில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும், என தெரி விக்கப்பட்டுள்ளது.

நாற்றுகள் நடவு செய்யும் பணி துவக்கம்

உதகை, ஜன. 20- குன்னூர் சிம்ஸ் பூங்கா வில் 63 ஆவது பழ கண் காட்சிக்காக 2 லட்சத்து 84 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி வியாழ னன்று துவங்கியது.

இன்று, நாளை குடிநீர் விநியோகம் இருக்காது

திருப்பூர், ஜன.20– திருப்பூர் மாநகராட்சிக்கு  குடிநீர் விநியோகம் செய்யும்  மூன்றாவது குடிநீர் திட்டத் தின் தலைமை நீரேற்று நிலை யத்தில் வெள்ளி, சனி இரு  நாட்கள் மின் பராமரிப்பு மற் றும் பிரதான குழாய் பாதை  சீரமைப்பு பணிகள் செய்யப் படுகிறது. இதனால் திருப்பூர்  மாநகராட்சி பகுதிகளில் சனி,  ஞாயிறு ஆகிய இரு நாட்கள்  மூன்றாவது குடிநீர் திட்டத் தின் மூலம் குடிநீர் விநியோ கம் முழுமையாக தடைப் படும் என்று மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

அணை நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.41/60அடி நீர்வரத்து:813கன அடி வெளியேற்றம்:815கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 80.12/90அடி.நீர்வரத்து:120கனஅடி வெளியேற்றம்:909கனஅடி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

ஈரோடு, ஜன.20- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண் டார். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதியன்று எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் ஆகிய வற்றை முதல்நிலை சரிபார்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி  அலுவலகம் தேர்தல் நடத்தும் அலுவலகமாக மாறி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 180042594890 என்ற இலவச எண்ணை வாக்களார்கள் தொடர்பு கொள்ளலாம்.  குறைதீர்க்கும் கூட்டம் ரத்து இடைத்தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் அனைத்து குறை தீர்க்கும் கூட்டங்களும் மார்ச் 4 ஆம் தேதி வரை ரத்து செய்யப் பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம், தொலை பேசி எண்: 1077, 0424-2260211 ஆகிய எண்களிலும், 9791788852 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் மக்கள் தங்களது கோரிக்கை களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிசு உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை முற்றுகையிட்ட மக்கள்

தருமபுரி, ஜன.20- தருமபுரி அருகே தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிசு உயிரிழந்த நிலையில், அம்மருத்துவம னையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், வி.கொக்கராபட்டி யைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பவித்ரா (19).  இவருக்கு தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாகக்கூறி நெடு மாறன் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து குழந் தையை உறவினர்கள் அங்கு அனுமதித்த னர். இந்நிலையில், வியாழனன்று குழந்தை இறந்துவிட்டதாகக்கூறி, குழந்தையின் உடலை பெற்று செல்லலாம் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இத னால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் உறவி னர்கள், குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வில்லை எனக்கூறி மருத்துவமனை முன்பு  அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து குழந்தையின் தந்தை முரு கன் கூறுகையில், குழந்தையை அனுமதித்த திலிருந்து மாத்திரை, மருந்து என மருத்துவ செலவாக 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெற் றுக்கொண்டனர். பணம் பெற்றுக்கொண்ட பிறகு குழந்தை இறந்து விட்டதாக மருத்து வமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.  இறந்த குழந்தையை வைத்து என்னிடம் பணம் பறித்துள்ளனர். அதனால் எனக்கு நீதி வேண் டும், என கண்ணீருடன் தெரிவித்தார்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த தருமபுரி டவுன் காவல் துறையி னர், குழந்தையின் தந்தை முருகனிடம் புகார் கொடுக்க அறிவுறுத்தினார். இதையடுத்து  போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

ரூ.1.78 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்

ரூ.1.78 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் உடுமலை, ஜன.20- திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கொழுமம் பகுதி யில் பிரபு (39) என்பவர் வீட்டில் வெள்ளியன்று கேரள மாநி லம், மறையூர் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்ட னர். இதுகுறித்து தமிழ்நாடு போலீசார் விசாரித்த போது, கேர ளாவில் கள்ளநோட்டு வைத்திருந்த திண்டுக்கல், சாணர்ப் பட்டியைச் சேர்ந்த அழகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மூன்று நாட்களுக்கு முன் குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் என்பவரை கேரள தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஹக்கீம் கொடுத்த தகவலின் பெயரில் கொழுமம் பகுதியில், தன்னை வனத் துறை அதிகாரி என்றுக்கூறி தங்கியிருந்த தேனி, கூடலூ ரைச் சேர்ந்த பிரபு என்பவரை கேரளா தனிப்படை போலீசார், கைது செய்தனர். இதையடுத்து அவரது வீட்டிலிருந்து ரூ.1.78 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள், பணம் என்னும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தடங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி

தருமபுரி, ஜன.20- தருமபுரி மாவட்டம், தடங் கம் கிராமத்தில் சனியன்று (இன்று) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் சுமார் 700 காளை களும், 700 மாடுபிடி வீரர்க ளும் கலந்து கொள்ள உள்ள னர். இப்போட்டியினை தமிழ் நாடு வேளாண் மற்றும் உழ வர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம் துவக்கி வைக்க உள் ளார். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் கூறுகை யில், தொலைக்காட்சிகளில் மதுரையில் மட்டுமே நடை பெறும் ஜல்லிக்கட்டுகளை பார்த்து வந்த நிலையில், தரு மபுரியிலும் மக்கள் நேரடி யாக பார்பதற்காகவும் தமி ழர்களின் வீர விளையாட்டை தமிழகம் முழுவதும் மக்க ளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழர்களின் வீர  விளையாட்டு சனியன்று தடங்கத்தில் நடைபெற உள் ளது. போட்டியை காண்ப தற்கு தகுந்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள் ளது. மேலும், போட்டி மைதா னம் அருகே தீயணைப்பு  துறை, மருத்துவக்குழு முகா மிட ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. பொதுமக்கள் அமர இருக்கைகளும் அமைக்கப் பட்டு வருகின்றன, என்றார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் ஜன.24ல் இளங்கலை மாணவர் சேர்க்கை 

கோவை, ஜன.20- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், இணைப் புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1105 இடங்களுக்கு உட னடி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜன.24 ஆம் தேதி யன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் உடனடி மாணவர் சேர்க்கை ஜன.24 தேதியன்று கோவையில் நடைபெற உள்ளது. இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந் தும். பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று தவற விட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாத வர்கள் மற்றும் புதிதாக அழைக்கப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். இதில், கலந்து கொள்ளும் மாணவர்கள், கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவை யில்லை. கலந்தாய்வில் இடம் கிடைக்கப் பெற்ற எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி மாணவர்களுக்கு ரூ. 1500, மற்றும் இதர பிரிவி னருக்கு ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும், இணைப் புக் கல்லூரிகளுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.40 ஆயிரம்  முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். இக்கட்டணத்தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம். இதுகுறித்து தகவல்கள் www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு, காலியிடங்கள் குறித்து அவ்வப்போது வெளியிடப்படும். மேலும், விவரங்க ளுக்கு ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முக வரி அல்லது 0422-6611345 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.