திருப்பூர், பிப்.1- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்லடம் சாலை தெற்கு உழவர் சந்தைக்கு அருகில் சாலை யோர வியாபாரம் செய்வது குறித்து வியாழனன்று சார் ஆட்சியர் தலைமை யில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பாலன் கூறு கையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு உழவர் சந்தைக்கு 150 மீட்டர் தொலை வில் சாலை ஓரத்தில் பழங்களை வைத்து தினசரி காலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்து வரு கின்றோம். உழவர் சந்தைக்குள் விற் கப்படும் காய்கறிகளை நாங்கள் விற் பனை செய்வது இல்லை. பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்து கிடை யாது. எங்கள் வாழ்வாதாரமே இதை நம்பி தான் உள்ளது என்றார். உழவர் சந்தை விவசாயிகள் கூறு கையில், நாங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி களிலிருந்து உழ வர் சந்தைக்கு விற்பனைக்காக காய்கறிகளை எடுத்து வருகின் றோம். பெரும்பா லான விவசாயி கள் இங்கு வியா பாரம் செய்து விட்டு மீண்டும் விளை நிலங்க ளுக்கு சென்று வேலையும் செய்து தான் பிழைப்பு நடத்தி வருகின் றோம். நாங்கள் விளைவித்த பொருட்க ளைதான் சந்தை படுத்துகின்றோம். இந்நிலையில், சாலையோர வியாபா ரிகள் காய்கறிகளை வெளியே போட்டு விற்றால் சந்தைக்குள் வந்து பொது மக்கள் வாங்காமல் வெளியவே வாங்கி விட்டு சென்றுவிடுகின்றனர். இதனால், எங்களுக்கு பெறும் இழப்பு ஏற்படுகி றது என்றனர். இருதரப்பினரின் கோரிக்கைகளை கேட்ட சார் ஆட்சியர் செளமியா ஆனந்த் மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோ சித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தையில், காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், ஆய்வாளர் கணேசன், உழவர் சந்தை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை யினர், சாலையோர வியாபாரிகள், விவ சாயிகள் பலர் பங்கேற்றனர்.