districts

img

பிடிஓ தற்கொலை: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடு

தருமபுரி, டிச.22- துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் தற்கொலைக்கு காரணமானவர் கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தரும புரி மாவட்டத்தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வெளி நடப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு  மாவட்ட  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தி பன் ஊரக வளர்ச்சி துறை உயர் அலு வலர்களின் கடும் நெருக்கடி மற்றும் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது தற் கொலைக்கு காரணமான அம்  மாவட்ட உயர் அலுவலர்களை  கண்டித்தும், அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியும் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்  சங்கம் சார்பில் ஒருமணி நேர வெளி நடப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டம் முழுவதும்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாநில துணைத்தலைவர் ஆறு முகம், மாநில செயற்குழு உறுப்பினர்  இளங்குமரன், மாவட்ட தலைவர்  சதீஷ்குமார், செயலாளர்சங்கர்,  பொருளாளர் சர்வோத்தமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் உட்பட 500க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.