ஈரோடு, நவ.30- பட்டியலின மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யவைத்த தலைமை ஆசிரியர் மீது வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந் துறை வட்டம், துடுப்பதி ஊராட்சி, துடுப்பதி பாலக்கரையில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளிக்கு அருகே உள்ள இந்திரா நகர் உள்ளிட்ட ஊர் களை சேர்ந்த பட்டியலின குழந் தைகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயன்படுத்த இரு கழிப்பறைகள் உள்ளன. மாணவிகளுக்கான மற்றொரு கழிப்பறையினை அங்கு பணி புரியும் ஆசிரியர்கள் பயன்படுத்து கின்றனர். இந்த கழிவறைகளை இங்கு பயிலும் பட்டியலின மாணவர் களில் 4,5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தான் கடந்த ஓராண்டுக்கு மேல் சுத்தம் செய்து வருகின்றனர். இவர்கள்தான் கழி வறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசி ரியர் கீதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்று பள்ளி மாண வர்கள் தெரிவிக்கின்றனர். கழி வறையினை சுத்தம் செய்ய பிளீச்சிங் பவுடர் பயன்படுத்து வதால் மாணவர்கள் கைகளில் காயம் ஏற்படுவதாகவும், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறது.
இதுகுறித்த தகவலறிந்த தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.பி.பழனி சாமி, மாவட்ட செயலாளர் மா. அண்ணாதுரை, பெருந்துறை பழனிசாமி மற்றும் பியூசிஎல் தலைவர் ஆகியோர் பாதிக்கப் பட்ட மாணவர்கள் மற்றும் பெற் றோரைச் சந்தித்தனர். மேலும், மாவட்ட குழந்தைகள் நல குழு விற்கு புகார் தெரிவித்தனர். அதன் பேரில் மாணவர்கள், பெற்றோர், தலைமை ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பியுசில் அமைப்புகளின் தலைவர்கள் ஆகி யோரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு விசாரணை செய்தனர். விசாரணையில், பட்டி யிலின மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் வற்புறுத்தி வருவதும், கழிவறை சுத்தம் செய்வது குறித்து பெற் றோர்களிடம் தெரிவிக்க கூடாது என்றும், மாணவர்களை அடிப் பதும் விசாரணையில் தெரியவந் துள்ளது. மேலும், கழிவறைகளை சுத்தம் செய்த மாணவர் ஒருவரின் கையில் ஏற்பட்ட சிராய்ப்பையும் விசாரணைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
இதனையடுத்து, பெற்றோர் அளித்த வாக்குமூலத்தின்படி தலைமை ஆசிரியர் மீது எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள, பள்ளி குழந் தைகளை தூய்மைப்பணி செய்ய வலியுறுத்திய ஆசிரியர்கள் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாரணைக்குழு விடம் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, பெருந்துறை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க சென்றபோது, காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் புகாரை பெறுவதற்கு மறுத்தனர். இது குறித்து பெருந்துறை காவல் உதவி கண்காணிப்பா ளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து தருவதாக உறுதி அளித் தார். இதுகுறித்து தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஈரோடு மாவட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியூர் அரசுப் பள்ளி மற்றும் பெருந்துறை முள் ளாம்பட்டி அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை கழி வறைகளை சுத்தம் செய்ய வைத்த போது நடவடிக்கை எடுக்காததன் விளைவாக தற்போது, பெருந் துறை பாலக்கரை அரசுப் பள்ளி யிலும் இந்த அவலம் நடைபெறு கிறது. இவ்வாறன புகார்கள் மீது உடனடியான நடவடிக்கை களை காவல்துறை மேற்கொள் வதில்லை. மாறக, இந்த அவலங் களை வெளிக்கொணர்ந்து வரும் அமைப்புகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது. ஆகவே, பணியில் கவனகுறைவாக இருக்கும் பெருந்துறை வட்டார கல்வி அலுவலர் மீதும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உள் ளிட்ட அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.